பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மூன்று ஐயங்கள்

271


சிற்பங்களால் பல்லவமல்லன் நடத்தை இன்னது என்பது நன்கு புலனாகிறது.

பெளத்த-சமணப் போராட்டங்கள் பெரும்பாலும் ஏழாம் நூற்றாண்டோடு முடிந்துவிட்டன எனக் கூறலாம். அதற்குப்பிற்பட்ட கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் சமணர் கழுவேற்றப் பட்டனர். எனின், வீராவேசத்துடன் சமண-சைவ வாதங்கள் நடந்த சம்பந்தர் காலத்தில்-அப்பரைப் பல்லாற்றானும் கொல்ல முயன்ற காலத்தில்-சம்பந்தர் இருந்த மடத்திற்கே நெருப்பிட்ட அக்காலத்தில் சமணர் கழுவேற்றப்பட்டனர் என்பதில் ஐயப்படத்தக்க குறிப்பு யாதுளது? இச்சமயக் கொடுமைகள், தாமஸ்போக்ஸ் போன்ற ஆராய்ச்சி அறிஞர் கூறுமாறு, ‘அக்கால நிலைமைக்கேற்ப நடைபெற்றனவாகும்’ எனக்கோடிலே வரலாற்றுணர்ச்சியுடையார் செயற்பாலது.


உயிர்ப்பலி இடுதல்

முன்னுரை

கபாலிகர் பாசுபதர் முதலிய சைவ சமய வேறு பிரிவினர் பைரவர்க்கும் காளிக்கும் செந்நீரையும் மதுவையும் படைத்தல் வழக்கம். இவ்விரு கடவுளர்க்கும் உயிர்களைப் பலியிட்டும் வந்தனர். இப் பழக்கம் நெடுங்காலமாகவே இந்தியா முழுவதும் இருந்த பழக்கமாகும். இது பல்லவர் காலத்திலும் இருந்ததென்பது அறியத் தக்கது. ஆயின் பல்லவ அரசர் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர் என்பதைக் கூறச் சான்று இல்லை. அவர்கள் காலத்தில் துர்க்கை, காளி முதலிய பல வடிவங்களில் வழிபடப் பட்டு வந்தது பெண் தெய்வமாகும். கயிலாசநாதர் கோவில் சிற்பங்களில்


446. The spirit of the then was not unfavourable to the religious presecution of its portrayal on the walls temple of the “Victorious creed”.

447. “The action was in close accordance with the spirit of the age’ - Thomas Foulkes

19


446. The spirit of the then was not unfavourable to the religious presecution of its portrayal on the walls temple of the “Victorious creed”.

447. “The action was in close accordance with the spirit of the age’ - Thomas Foulkes

19