112
பல்லவர் வரலாறு
தலைநகரை அழித்துத் தீர்த்துக் கொண்டான் என்பது தெரிகிறது. நகரத்தின் பல இடங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். கோவில்கள் வருவாய் இன்றித் தத்தளித்தன; பல அழகிய பழைய கட்டடங்கள் இன்று இருத்தலால், நகரம் முழுவதும் ,ாழாக்கப்படவில்லை என்பது தெளிவு. பல்லவன் வாதாபி கொண்ட காலம் கி.பி. 642 என்பர் ஆராய்ச்சியாளர். அந் நகரம் ஏறத்தாழ 13 ஆண்டுகள் பல்லவர்கையில் இருந்ததென்னலாம் (கி.பி. 642-655).[1] வாதாபியில் தக்கிண-ஈரப்பன் கோவிலுக்கருகில் உள்ள கம்பம் ஒன்றில் நரசிம்மவர்மனது பதின்மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. அது சிதைந்து இருத்தலால், வாதாபி என்னும் சொல்லும், நரசிம்மவர்மன் என்னும் சொல்லுமே படிக்கக் கூடியனவாக உள்ளன. நரசிம்மவர்மன்தன் வெற்றியை அத்துண்மீது பொறித்தனன் போலும்![2]
சேனைத் தலைவர் - பரஞ்சோதியார்
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனது உயர் அலுவலாளராக இருந்த சேக்கிழார் பெருமான். இவ்வாதாபி கொண்ட செய்தியைத் தாம் கேட்டு அறிந்தவரை கூறியுள்ளது காண்க:
- “மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித்
- தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப்
- பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
- இன்னனஎண்ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.”[3]
இதனால், (1) நரசிம்மவர்மனின் தானைத் தலைவர் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவரான, சிறுத்தொண்டர் என்ற பரஞ்சோதியார் என்பதும், (2) அவரே வாதாபியுள் நுழைந்து