பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/839

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 343. ஞானம் பெற தானத்தத் தான தானன தானத்தத் தான தானன தானத்தத் தான தானன தந்ததான வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ னாதது வாய்விட்டுப் பேசொ னாதது நெஞ்சினாலேமாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ னாதது மாயைக்குச் சூழொ ணாதது 'விந்துநாத, ஒசைக்குத் துார மானது மாகத்துக் கீற தானது லோகத்துக் காதி யானது கண்டுநாயேன். யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி யூனத்தைப் போடி டாதும யங்கலாமோ, ஆசைப்பட் டேனல் காவல்செய்ர் வேடிச்சிக் காக மாமய லாகிப்பொற் பாத மேபணி கந்தவேளே.

  1. ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் S காள மோடட

ராரத்தைப் பூண்ம பூரது ரங்கவீரா, விந்து நாத ஓசைக்குத் துரமானது இந்த அருமை அடியை 1888 A.D. யில் இருந்த மதுரைச் சிவப்பிரகாசர் சிவப்பிரகாசத்து" க்குத் தாம் எழுதிய உரையில் எடுத்து ஆண்டுள்ளார். இதனால் 1450 A.D-யில் இருந்த அருணகிரியாரின் திருவாக்கு அவர் காலத்துக்கு அண்மையிலேயே சாத்திர உரையில் எடுத்தாளப்படும் பெருமை வாய்ந்ததாய் இருந்தது என்பது புலப்படுகின்றது . இதன் விவரத்தை அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் என்னும் எனது நூலிற் பார்க்கவும் (பக்கம் 61). t வள்ளி காலிற் பணிந்தது - திருப்புகழ் 290 பார்க்க

  1. ஆலித்து களித்து.

S நீளக் காள புயங்க கால. கலாபத்தேர்" பூட்டு பணிப் பத மாமயில்" என்றார் பிற இடங்களிலும் - திருப்புகழ் 8ே, 789,