பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 241 உருவாய் அமைந்த பாத்திரம்; அஞ்சு (ஐம்பூதங்களும் அல்லது ஐம்பொறிகளும் பொருந்தி உள்ள கூடு; மனத்துடனே உயிரும் (உடலைவிட்டு) வெளியேறும் (குரம்பை) சிறுகுடில், அழியாமல் நிலைத்து நிற்குமென்று. உலகத்தாருடன் நான் கொண்டுள்ள வினைப்பயனால் வரும் மயக்கம் (ஒழிந்து) நீங்கப்பெற்று உனது இரண்டு பாத தாமரைகளை அடையும் பாக்கியத்தைப் பெறுவேனோ! ண்ணாமலையில் உயர்ந் ப்கின பரிசுத்த LDГтабT, ಕೌಲ್ಯ கோபுர jಿ SSEಥಿ கராம்புயங்கள்_அமரர் குழாம் குவிந் து (அமரர் குழாம் கராம் புயங்கள் குவிந்து) - தேவர்களின் கூட்டங்கள் தமது தாமரையன்ன் க்ரங்களை (கைகளை)க் கூப்பித் தொழ வாழ்கின்ற அடியவர் தோழனே! முன்பு ஒரு காலத்தில் சொல்லப் படுகின்ற அகில அண்டங்களையும் உண்ட பு துமை வாய்ந்த சாரங்கம் என்னும் வில்லை ஏந்திய (கண்டன்) வீரனாம் திருமாலின் மருமகனே! கருணை நிறைந்த மிருகசிரேஷ்டரான அன்பர் புலிக்கால்கொண்ட வியாக்ரபாதருடன், உரகேந்த்ரர் - சர்ப்ப சிரேஷ்டராம் பதஞ்சலி தரிசித்த கடவுளாம் நடராஜப் பெருமானுடைய குமாரனே! மலைகளைத் துாளாக்கும். தோகை உடைய பகூதி சிரேஷ்டனாம் மயில் வாகனனே! நூல்கள் வல்லவனே! அரசே! உண்மையிற் சிறந்தவனே (சத்திய சிரேஷ்டனே) கந்தனே! குலிச கர இந்திரர் - குலிசாயுதத்தை (வஜ்ராயுதத்தைக்) கையிற் கொண்ட தேவேந்திரர்களுக்குப் பெருமாளே! (உன் உபய பதாம்புயங்கள் அடைவேனோ) 545. இருண்ட கரிய கூந்தல் அவிழ, சந்திரன் போன்ற முகத்தில் உண்டான முத்துப்போன்ற வேர்வை வெளித் தோன்ற, விளங்கும் கயல்மீன் போன்ற கண்கள் புரள, இரண்டு பாரமான கொங்கைகள் நெகிழ்ச்சியுற, இடை துவட்சியுற, (கை) வளையல்கள் ஒன்றோடொன்று மோ ஒலிக்க, யாராலும