பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/833

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கடிமுத்து மாலை வளைமுத்து மாலை கடல்முத்து மாலை யரவீனும், அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி னடைவொத்து லாவ அடியேன்முன். அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு

  • மடிமைக்கு ழாமொ டருள்வாயே,

fமழையொத்த சோதி குயில்தத்தை போலு

  1. மழலைச்சொ லாயி யெமையீனு,

(273 ஆம் குறிப்புத் தொடர்ச்சி) கதலிவரு கணிக்கண் பொழி நிலா, விழையு முத்தும், குருகு தலையின் முத்தும் கமுகின் மிடையு முத்தும், தெரிவைமார் மிடறின் முத்தும், கிருடி யெயிறு முத்தும், கிளையின் விளையு முத்தும். பணையினார் கழையின் முத்தும் பணில முதவு முத்தும். செநெலின் கதிரின் முத்தும். புனலுலாம். கயலின் முத்தும், சலவர் முழுகு நத்தின் வயிறு களுலு முத்தும், புகழதாய்த் தழையு முத்தும் புனையு மணி புரத்தின் குமர தருக முத்தம் தருகவே, தணிகை வெற்பின் கண் அமர் அறுமுகப் பொன்குழவி தருக முத்தந் தருகவே - தணிகைப் பிள்ளைத் தமிழ். (1) மூங்கில்முத்து (எங்கனம் பெறப்படும்) என்பது முதுவேய் கலகலென ஒலிகொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்திமலை 327.5 வேரல் நரன்றுக்க வெண்மணிக் குப்பை"தணிகையாற்றுப் படை384. (2) களிமுத்து - யானை முத்து எங்ங்ணம் பெறப்படும் என்பது: "பருக்கை யானை மத்தகத்து அரிக்குலத் துகிர்ப்புக நெருக்கி வாய நித்திலம் நிரக்கும் நீள் பொருப்பனுார்" - சம்பந்தர் 2-101-1. வேழத்தின் வெண்மருப்பினைக் கீழ்ந்து சிங்கங் குருகுண்ண முத்து உதிரும் கேதாரமே" - சம்பந்தர் 2-114-9. 'பிறழ்பற் பேழ்வாய்ப் பின்முன் பார்வைச் சிங்க வல்லேறு பொங்குசினந் திருகி எழுந்து தாய்த் துமிப்ப இருங்கடா யானை மத்தகம் பிளந்து மாயிருங் குன்றத்து வெண்புன லருவி வீழ்வன போலச் சலசல வுக்க தரளக் குவாலும்" - தணிகை யாற்றுப்படை 385. (தொடர்ச்சி பக்கம் 275)