பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

878 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மாலை யோதி முடித்து “மாது தாள்கள் பிடித்து f வாயி லூறல் குடித்து மயல்திர. வாகு தோளி லனைத்து மாக மார்பொழி லுற்ற வாகை மாநகர் பற்று பெருமாளே. (1) 7. 4 விசுவை. 995. திருவடியைப் பெற தனண தணந்த தனண தணந்த தனண தணந்த தனதான திருகு செறிந்த குழலை வகிர்ந்து - முடிமலர் கொண்டொ ரழகாகச். செயவரு துங்க முகமும் விளங்க முலைகள் குலுங்க வருமோக; அரிவையர் தங்கள் வலையில் விழுந்து அறிவு மெலிந்து தளராதே. (877 ஆம் பக்கத் தொடர்ச்சி) * வள்ளியிடம் வாய்மை தெளித்தது - "நீ முற்பிறப்பில் திருமாலின் மகள். எம்மை அணையவேண்டித் தவஞ் செய்தாய். அதனால் இப்போது உன்னை அடைந்தேன்" - என முருகவேள் உண்மையை வள்ளிக்கு விளக்கினார். "உம்மை யதனில் உலகமுண்டோன் தன் மகள் நீ நம்மை அணையும்வகை நற்றவஞ் செய்தாய்; அதனால் இம்மை தனிலுன்னை எய்தினோம் என்றெங்கள் அம்மை தனித்தழுவி ஐயன் அருள் புரிந்தான்" -கந்தபுரா 6.24.119. + "குறமகள் பாதம் வருடிய மணவாளா" "குறத்தி பதத்துணை வருடி" - திருப்புகழ் 225, 296. f வாயிதழின் சுவையால்" - திருப்புகழ் 1002 # இது வடக்கே உள்ள விசாக பட்டினம் தானோ வேறு தலமோ தெரியவில்லை: அருணகிரியார் வட நாட்டுத் தலங்களையும் தரிசித்தனர் என்பதை அவருடைய பாடல்கள் 655-659 (தொடர்ச்சி 879 ஆம் பக்கம் பார்க்க)