பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

846 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ஆல கோட்டு மிடற்றுச் சோதிக பாலி பார்ப்பதி பகடித் தால் நட மாடி t தாத்திரி பட்சித் தாவென வுமிழ்#வாளி. ஆடல் கோத்த சிலைக்கைச் சேவக னோடை பூத்த தளக்கட் Xசானவி யாறு தேக்கிய கற்றைச் சேகர Oசடதாரி, சில மாப்பதி மத்தப் *பாரிட சேனை போற்றிடு tt மப்பர்க் கோதிய சேத னார்த்தப்ர சித்திக் கேவரு முருகோனே. சேல றாக்கயல் தத்தச் இவய லுார வேற்கர # விப்ரர்க் காதர தீர xதீர்த்த திருப்புத் துருண்ற பெருமாளே.(2)

  • பார்வதி பக்கத்திருக்க நடமாடல்

'நாரியொர் பாகமாக நடமாடவல்ல...நம்பன்-சம்பந்தர் 2.87-1 t பூமியைத் திருமால் உண்டு உமிழ்ந்தது - பாடல் 267-பக்கம் 161 கீழ்க்குறிப்பு. t வையம் ஏழுங் கண்டாள் பிள்ளை வாயுளே - பெரியாழ். 1-1.6. # திரிபுரம் எரித்தபோது - திருமால் அம்பாக அமைந்தது பாடல் 285-பக்கம் 206 கிழ்க்குறிப்பு. x சானவி - கங்கையாறு - பகீரதச் சக்கரவர்த்தி தன் பிதுர்க்களின் சாபம் நீங்கத் தவம் புரிந்து கங்கையை வரவழைத்தனன். கங்கை தமது ஆச்சிரமத்தின் வழியில் வருவதை அறிந்த சந்து முநிவர் அதனை ஆசமணஞ்செய்தனர். பகிரதன் அவரை வேண்ட அவர் அதைத் தமது காதின் வழியாக வெளியே விட்டனர். அவர் காதின் வழியாய் வெளிவந்ததால் கங்கை சாநவி எனப் பெயர் பெற்றனள். "சகரர் தம்பொருட் டருந்தவம் பெரும்பகல் தள்ளிப் பகிர தன்கொணர்ந் திடுதலாற் பகிரதி யாகி மகித லத்திடைச் சன்னுவின் செவிவழி வரலால் நிகளில் சாணவி எனப் பெயர் படைத்ததிந் நீத்தம்" -கம்பராமா - அகலிகை 51. o சடாதாரி - சடாரி எனக் குறுகிற்று. கங்கையைச் சூடிய வரலாறு பாடல் 446-பக்கம் 622 கீழ்க்குறிப்பு.

  • பாரிடசேன்ை போற்றிடும் அப்பர்:

"குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து" "பாரிடம் போற்றிசைப்ப" - சம்பந்தர் 2-27-1; 1-64-7 (தொடர்ச்சி 847 ஆம் பக்கம் பார்க்க)