பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 முருகவேள் திருமுறை 12 திருமுறை செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை தெளிவினுடன் மூல மேயென முந்தச் சிந்தித் தருள்மாயன். திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய ஜெயசரவ ணாம னோகர செந்திற் கந்தப் பெருமாளே.(33) 49. திருவடியைப் பெற அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல அனலவிய மலமொழுக அகலாதே; அணையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ அழலினிகர் மறலியெனை யழையாதே; செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர் - திருவடியி லணுகவர மருள்வாயே சிவனை நிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே; நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதி முளரி நிருதிநிதிபதிகரிய வனமாலி நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி நிருதனுர மறஅயிலை - விடுவோனே: 1. முளரி - அக்கினி.