பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630 முருகவேள் திருமுறை (6ஆம் திருமுறை மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபத மணிந்து பணியேனே: ஆதியொடு மந்த மாகிய நலங்கள்

  • ஆறுமுக மென்று தெரியேனே.

t ஆனதனி மந்த்ர ருபநிலை கொண்ட தாடுமயி லென்ப தறியேனே, நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானில மலைந்து திரிவேனே. # நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று தொழுகேனே S சோதியுணர் கின்ற வாழ்வுகிவ மென்ற ' சோகமது தந்து எனையாள்வாய் ஆரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற பெருமாளே. (12) † ஆறு திருமுகங்களும் - ஆதி சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, பரா சக்தி, ஞான சக்தி, குடிலா சக்தி என்றும்; அ, உ, ம், நாதம், விந்து, சக்தி என்றும், சிவபிரானுடைய ஆறு திருமுகங்களாம் என்றும் ஈசன் திருமுகங்கள் ஐந்துடன் தேவி திருமுகம் ஒன்றும் சேர்ந்து ஆறு ஆயின என்றும், ஐசுவரியம், வீரியம், புகழ், திரு ஞானம், வைராக்கியம் என்னும் ஆறு குணங்களாம் என்றும் பலவகையாகக் கூறுவர். | t ஆடுமயில் ஓங்கார (பிரணவ ரூபத்தைக் காட்டும் ஓ (ங்) காரபரி என வருவதும் உணரத்தக்கது. (திருப்புகழ் 145)

  1. நாகம் - இது . " சூலமென ஓடு சர்ப்ப வாயு" பாட்டு 790, பாட்டு 190 இன் முதல் நாலடியின் உரைகள் பார்க்க

S "ஊதி உணர்கின்ற வாழ்வு சிவமென்ற யோகமது தந்து எனையாள்வாய் ஒது தமிழ்கொண்டு ஞானவெளி தந்த ஊதிமலை கொண்ட பெருமாளே." - என்றும் பாடம் (அடுத்த பக்கம் பார்க்க)