பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இனி ஒருவர்
இல்லை காண்!


பெற்றோர்களே முடிவு செய்து விட்டார்கள் இந்தக் குழந்தை பிழைக்காது என்று! என்றாலும், அந்தக் குழந்தை பிழைத்துக் கொண்டது. அதிர்ஷ்டம் உள்ள குழந்தைதான். பெற்றோர்களுக்கு மனநிறைவு தராத உடல் நிறைவு பெறாமல் பிறந்து விட்ட குழந்தைதான்.

வலுவில்லாத உடல். தொய்ந்துபோன தன்மையில் உறுதியில்லாமல் பிறந்த குழந்தையைக் கண்டு, என்ன செய்வது என்று உள்ளத்தைத் தேற்றில் கொண்ட பெற்றோர்கள், உந்திய பிள்ளை பாசத்தால் ஏற்றுக் கொண்டர்கள். தப்பித்துக்கொண்ட குழந்தையும் உணர்வு பூர்வமாக தள்ளாட்டத்துடன் வளர்ந்தது.

சாண் குழந்தை என்றாலும் ஆண் குழந்தை என்பார்களே அதுபோல, தானாகவே அந்தக் குழந்தையும் வளர்ந்தது. செல்லமாக வளர்த்தார்கள் பெற்றோரும். சிற்றில் மிதித்து, சீண்டி விட்டுச் சிரித்து மகிழும் குழந்தைப் பருவம் என்று நமது இலக்கியங்கள் பாடுமே, அதற்கேற்ப குழந்தையும் விளையாடிக் கொண்டு