பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக் கினியோனே, *சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப் பதியோனே. தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் பெருமாளே (34) 485. திருவடியைப் பற்ற தான தத்தனத் தான தானனத் தான தத்தனத் தான தானனத் தான தத்தனத் தான தானனத் தனதான சிசி tமுப்புரக் காடு நீறெழச் சாடி நித்திரைக் + கோசம் வேரறச் சிவன் முத்தியிற் கூட வேகளித் தநுபூதி சேர Xஅற்புதக் கோல மாமெனச் சூரி யப்புவிக் கேறி யாடுகச் சீலம் வைத்தருட் டேறி யேயிருக் கறியாமற்.

  • கோழிக்கொடி - முருகவேளின் வலது திருக்கரத்தில் உள்ளது

'வீறு கேதனம் வச்சிரம் அங்குசம் விசிகம் மாறிலாத வேல் அபயமே வலம்; இடம் வரதம் ஏறுபங்கயம் மணி, மழுத் தண்டுவில் இசைந்த ஆறிரண்டு கை அறுமுகம் கொண்டு வேல் அடைந்தான். (கந்தபுராணம் 3-10-4) f "சுட்டு வெம்புரம் நீறாக திரிபுரமாகிய மும்மலங்களும் வெந்து நீறாகும்படிச் சுட்டு' எனவரும் 612 ஆம் பாடலின் உரையைக் காண்க 4 கோசம் - பஞ்சகோசம் அவைதாம்-1 அன்னமயகோசம் அன்னம் (உணவு) அதனால் ஆய உடல் 2 பிராணமய கோசம கன்மேந்திரியமும் பிராணனும் கூடியது; 3 மனோமயகோசம் மனம் 4 விஞ்ஞானமய கோசம். ஞானேந்திரியமும் புத்தியும் (ஞானந்திரியம் உணர்தற்குரிய மெய் வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள்) 5 ஆனந்தமயகோசம் ஆன்மாவுக்குள்ளே உள்ள உறை. இந்த ஐந்து கோசங்களும் ஆன்மாவை மூடிக்கொண்டிருக்கின்றன. (X-பக்கம் 97 பார்க்க)