பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/948

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

389 திருப்புகழ் உரை [ولیAقیق பாற்கடலின்மேல் பாம்பின்மேல் இலக்குமியுடன் படுக்கை கொண்ட நீல உருவத்தினன், வலிமை பொருந்திய ராவணனும் அவன் கூட்டத்தாரும் அஞ்சி ஒடி விலகப் பூமியில் (ஏவை) அம்பைச் செலுத்தின முராரி, (முராசுரனுடைய பகைவனும்), பஞ்சபாண்டவர் ஐவரின் தோழனுமான திருமாலின் மருகனே! மாதா, (புராரி) திரிபுரத்தை எரித்தவள். சுகக்கடல், பரதேவதை, நாரி (பெண்), உமை, ஆகாச சொரூபி, (அபிராமி) அழகி, ஆகிய பார்வதியின் வலப்ப்ால் உள்ள சிவன், ரிஷப (விடை) வாகனன், நடனம் செய்யும் ஒரு தலைவன் (அல்லது விடையின்மேல் நடிக்கும் ஒப்பற்ற தலைவன் ஆகிய சிவன்) மகிழும்படியான ஞானப்பொருளை அவருக்கு அருளின குருமூர்த்தியே: (வானோர்கள் ஈசன்) தேவேந்திரன் (வளர்த்த) மயில்போன்ற தேவசேனையுடன் (குறமாது) வள்ளியை மணந்த மணவாளனே! குகனே! குமரனே! சிறந்த மயிலின்மீது திருமாகாள மகா நகரில் ஆசையுடனே அடியார்கள் பரவி வழி படும் பெருமாளே! (நாதா, குமாரமுருகா எனவும் ஓத அருள்புரிவாயே) இஞ்சிகுடி 811. குங்குமம், பச்சைக் கற்பூரம், (நாவி) புனுகுச்சட்டம்) (இம சல்ம் பனிநீர் - பன்னிர், சந்தனம், கஸ்தூரி, இவைகளின் (இலேபம்) பூசுகையால் நறுமணம் கொண்டுள்ள நகரேகை கொண்டுள்ள கொங்கை வளையும்படி பெரிய (முகபடம்) மூடு துணியை - ரவிக்கை மேலாடை முதலிய அணிந்து,