பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை - 35 - - - SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - -o - - - * தற்கால உரை: வேண்டிய காலத்தில் மழைபெய்யத் தவறிவிடுமானால் பரந்த கடல் சூழ்ந்த உலகிலுள்ள உயிர்களை எல்லாம் பசி துன்புறுத்தும். புதிய உரை: விண் வழங்கும் கொடையான மழை, எப்போதும் போல இயல்பாக வழங்காமல் போனால், கடல் வற்றும்; ககனத்து உயிர்கள் துன்புறும் அழியும். விளக்கம்: உலக வறுமையை விரட்ட மாண்பான மழை பொழிகிறது. உடல், உள்ள வறுமையை விரட்டும் படையாக மழை வருகிறது. 14. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால் பொருள் விளக்கம்: ஏரின் = எழுச்சியும், தோற்றப் பொலிவும் உழவர் = படைவீரர் மற்றும் உலகமக்களிடம் உழாஅர் = முயற்சியும் தொழிலும் நடைபெறாது. புயலென்னும் = நீர்க்கடலானது வாரிவளம் = தன்மிகுதித் தன்மையும் கால் குன்றி = காற்றின் இயக்கமும் குறைந்து போகிறது. சொல் விளக்கம்: ஏர்-அழகு, தோற்றம், பொலிவு, எழுச்சி, நன்மை, வளர்ச்சி, உழவுக் கிசைந்த தளவாடம். உழவர்= வீரர், படைவீரர் உழ = முயல, வேலை செய்ய, தொழில்நடத்த. புயல் = நீர், கடல்; வாரி = மிகுதி, விளைவு: கால் = வலிமை, உயிர்க்காற்று. . முற்கால உரை: மழை என்னும் வருவாய் தன் பலன் குன்றின், உழவர் ஏாான் உழுதலைச் செய்யார். தற்கால உரை: மழை என்னும் சிறந்த வருமானம் குறைந்து போகுமானால் உழவர்தம் ஏரைப் பூட்டி உழவுத் தொழில் செய்யவும் மாட்டார்.