பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 முருகவேள் திருமுறை 15 ஆம் திருமுறை 245. தொண்டருக்குத் தொண்டு செய்ய தனத்ததன தனன தனந்த தனத்ததன தனன தனந்த தனத்ததன தனண தணந்த தனதான கறுத்ததலை வெளிறு மிகுந்து, H மதர்த்த இணை விழிகள் குழிந்து கதுப்பிலுறு தசைகள் வறண்டு செவிதோலாய்க். கழுத்தடியு மடைய வளைந்து கனத்தநெடு முதுகு குனிந்து கதுப்புறுப லடைய விழுந்து தடுநீர்சோர்; உறக்கம்வரு மளவி லெலும்பு குலுக்கிவிடு மிருமல் தொடங்கி உரத்தகன குரலு நெரிந்து தடிகாலாய்உரைத்த நடை தளரு முடம்பு பழுத்திடுமுன் மிகவும் விரும்பி உனக்கடிமை படுமவர் "தொண்டு புரிவேனோ, சிறுத்த செலு, வதணு ஆரிருந்து பெருத்ததிரை யுததி கரந்து செறித்தமறை கொணர நிவந்த ஜெயமா#லே. செறித்தவளை கடலில் வரம்பு புதுக்கியிளை யவனொ டறிந்து செயிர்த்தஅது மனையு முகந்து படையோடி, 'அடியார்க்கு அடியராதலின் சிறப்பை அப்பர் சுவாமிகள் நமக்கு உண்டு கொலோ தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே" (IV-10) என விளக்கித் திருப்பதிகம் பாடியுள்ளார். t செலு-மீன்சிறை. திருமால் வேதங்களை மீட்டது. - சோமுகன் என்னும் அசுரன் பிரமணிடத்திருந்த மறை நூல்களை (வேத புத்தகங்களைப்) பிடுங்கி எடுத்துக் கொண்டு போய்க் கடலுள் மறைந்தான். திருமால் பெரிய சேல் மீனாகிக் கடல் நீருட் புக்கு அச் சோமுகனைக் கொன்று வேத