பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 முருகவேள் திருமுறை (5- ஆம் திருமுறை 250. அகப்பொருள் - (மாலையை விரும்புதல்) தனனத் தனனத் தனணத் தனனத் தனனத் தனனத் தனதான 'குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக் tகுடையிட் டகுறைப் பிறையாலேகுறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக் குயிலுக் குமினித் தளராதே; இவளைத் துவளக் கலவிக் குநயத் திறுகத் தழுவிப் புயமீதே. இணையற் றழகிற் புனையக் கருணைக் கினிமைத் தொடையைத் தரவேணும்; கவளக் கரடக் கரியெட் டலறக் கனகக் கிரியைப் பொரும்வேலா. கருதிச் செயலைப் புயனுக் குருகிக் கலவிக் கணயத் தெழுமார்பா பவளத் தரளத் திரளக் குவைவெற் பவையொப் புவயற் * # றமீதே பணிலத் திரள்மொய்த் ததிருத்தணிகைப் பதியிற் குமரப் பெருமாளே.(2) 'குவளைக் கணை காமனது ஐந்தாவது கணை (தொகுதி 1 பாட்டு-19) tமன்மதனுக்குக் குடை - திங்கள்; காம நோயுற்றாரை வருத்துவன - பிறையும் அலர் மொழியும்.

  1. செயலைப் புயன். அசோகமலர்க் கணையைக் கையிலுடைய மன் மதன், செயலை- அசோகு.