பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

820 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • மாமறை முழங்கு பூ புருட மங்கை

மாநக ரமர்ந்த பெருமாளே. (3) இலஞ்சி. (இது தென்காசிரெயில்வே ஸ்டேஷனுக்குமேற்கு 3 மைல் தூரத்தி லுள்ள குற்றாலும் என்னும் ஸ்தலத்துக்குச் சமீபத்திலுள்ளது. இத் தலத்துத் தல விருக்ஷம் இலஞ்சி ஆகிழமரம் திரு இலஞ்சி முருகன் உலா அச்சேறி யுள்ளது. குற்றாலத்தில் இருந்த திருமாலின் ஆலயம் திருமுற்றம் எனப்படும். அகத்தியர் அங்குச் செல்ல அவரைக் கண்ட வைணவர்கள் அவரை அங்கு வர ஒட்டாது வெருட்டினர். அகத்தியர் இந் நிகழ்ச்சியை இலஞ்சி முருகனிடம் விண்ணப்பிக்க அவர் ஒதிக் கொடுத்த தந்திரப்படி வைணவ வேடம் பூண்டு அகத்தியர் சென்று குற்றாலத்தில் இருந்த திருமாலைக் குறுகுகுறுகு என்று கூறி t மகாலிங்கமாக்கினர். (கந்தபுராணம்2-28). 975. யமன் வராதொழிய நீ வருக தணந்த தனதன தனந்த தனதன தனந்த தனதன தனதான கரங்க மலமின தரம்ப வளம்வளை களம்ப கழிவிழி மொழியாகு. கரும்ப முதுமுல்ை குரும்பை +குருகுப கரும்பி டியினடை யெயின்மாதோ, (819 ஆம் பக்கத் தொடர்ச்சி) (தொடர்ச்சி) (திருமாலும் வேடராஜனை வியந்து மாதவன் என்ற எனக்குப் பேரே ஒழிய மாதவம் ஒன்றும் எனக்கு இல்லை; உண்மையான மாதவன் இந்திரனே; இந்திரனிலும் பெரிய மாதவன் இந்த வேடராஜன்" எனப் புகழ்ந்தார்.) "மாதவன் எனும் பேரல்லால் மாதவம் ஈங்கொன் றில்லை மாதவன் புலவர் கோமான் மற்றவன் தன்னிற் சால மாதவன் புளினர் கோமான் ** என்றனன் மதுவை அட்டோன்" (புலவர் கோமான் - இந்திரன்: புளினர் கோமான் - வேடராஜன் மதுவை அட்டோன் - திருமால்). தணிகைப் புராணம் வள்ளி திருமண 176-177.

  • தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்". வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர், திருநான் மறைகள் வல்லார் மலிதண் சிரிவர மங்கை" - திருவாய்மொழி 5.7-3, 4-7.9.

(தொடர்ச்சி 821 ஆம் பக்கம பார்க்க).