இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
துறை மாத இதழான "விளையாட்டுக் களஞ்சியத்தில்" வெளி வந்த சொல்லோவியங்களைத் தொகுத்து, உங்கள் கைகளில் தவழ விட்டிருக்கிறேன்.
உலகப் புகழ் பெற்ற வீரர்களின் உன்னத வாழ்க்கையில் நடந்த ஒப்பற்ற நிகழ்ச்சிகளை ஒருங்கினைத்துக் கூறித் தந்திருப்பது, நம்தமிழகத்து மாணவ மாணவிகளும் வாலிபர்களும் இத்தகைய பண்பாடும் பாரம்பரியமும் பெறவேண்டும். அவர்கள் தம் வாழ்வும் மலர வேண்டும் என்ற ஏற்றமிகு நோக்கமே தவிர வேறென்றும் அல்ல.
என் நோக்கம் வெற்றி பெறுமேயாயின், அது நான் பெற்ற பேறு என்று மகிழ்வேன்.
இந்த அரிய நூலையும், ஏற்கெனவே வெளியாகி வந்த எனது நூல்களை ஏற்று மகிழ்ந்து பாராட்டி ஆதரவு தந்த தமிழ் கூறும் நல்லுலக மக்கள் திருக்கரங்களிலே மகிழ்ச்சியுடன் படைக்கிறேன்.
வணக்கம்
ஞானமலர் இல்லம் | எஸ். நவராஜ் செல்லையா
| ||||
சென்னை-17 |