பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 350 592. இருவினையினால் (என்னுடைய) அறிவு மயக்கம் அடைந்து (நான்) திரியாமல் ஏழு நரகங்களிலும் கலக்க முறுதற்கு உரிய நெஞ்சத்தைப் படைத்து (நான்) அலையாமல் சிறந்த குருமூர்த்தியின் திருவருளை நினைவில் வைத்து ஞானத் தெளிவ்ர்ல் போற்றுதற்குரிய (உனது) தரிசனக் காட்சியை என்றைக்கு என்க்கு அருள்புரிவாய், (யாவரும்) தெரிந்து (மகிழத்தக்க) தமிழை ஆய்ந்து உதவின சங்க்ப் புலவ்னாய் விளங்கினவனே! சிவபெருமான் பெற்றருளிய முருகனே! செவ்விய பொன்னாலாய் கழலை அண்ந்தவனே! அருள் நெறியை அநுஷ்டிக்கும் அன்பர்களுக்கு எளியவனே! கனகசபையில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே! (தரிசனையை என்று எற்கு அருள்வாய்) 593. குகனே! குருபரனே என்று மனம்கொண்டு நான் புகழவும், (உனது) EPs ன் ணைகொண் (எனது) உள் நாவில் இன்ப்ரசத்தின் பொங்கச் சிவ அமுது ஊறுவதால் வயிற்றுப் பசியாறி - பொல்லாத இருவினைகளின் மூலப்பகுதி, (வஞ்சகக்) கொடிய கேடுகள், நோய்கள் இவ்ையெல்லாம் விேரோடு தொன்லந்து அழிலுறவும், "நமசிவுய் ஒம்" என (மந்திரத்தை) அன்புடன் ஒதிம்கிழ்ச்சி நிரம்பவும், (358 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) X கனகசபை - பொன்னம்பலம். இது பஞ்ச சபைகளுள் ஒன்று. ரத்னசபை - திருவாலங்காடு, ரஜதசபை (வெள்ளியம்பலம்). மதுரை: o "சிவஞானமுதே பசியாறி" - எனவரும் பாடல் 563. பக்கம் 282 கீழ்க்குறிப்பைப் பார்க்க - 輩輩 வஞ்சம் - கொடுமை - வஞ்சக் கருங்கடல்நஞ் சுண்டார் போலும்". அப்பர் - 6-21-4. tt நமசிவய' - இது ஸ்தூல பஞ்சாக்ஷரம் - பாடல் 262-பக்கம் 152 கீழ்க்குறிப்பு.