பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1086

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைமருதூர்) திருப்புகழ் உரை 527 வறுமைகள்(தரித்திர திசை)நெருங்கிவர, கையில் உள்ள பொருள்கள் விலகி ஒழிய, சிலவகையான (வாதநோய்) வாயு சம்பந்தமான நோய்கள், ஊது காமாலை (உடல் வீக்கம் தரும் காமாலை), (சோகை நோய்) - ரத்த மின்மையால் முகம்வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய், (பெருவயிறு) மகோதர நோய், வயிற்றுவலி, (படுவன்)-ஒருவகைப் புண்கட்டி - இவையெலாம்வர, இரண்டு கண்களிலும் பீளை க்குஉற். (ஈளை) கோழை மேலிட்டு எழ, வழவழ என்று உமிழ்கின்ற (கோழை) கொழ கொழ என்று ஒழகிவிழ (ஊனெலாம் வாடி)தேகத்தில் உள்ள சதையெல்லாம் வற்றிப்போய், நாடியும் பேதப்பட்டு வேறாகி, மனையவள் மனம் வேறாய்-மனையாளும் (இனி எப்படி இவர் பிழைப்பது என) மன உறுதி வேறுபட்டு (தைரியத்தை இழந்து). (மறுக) கலக்கம்.உற, வீட்டில் உள்ளவர்களும் (நணுகும் நணுகும்) சமீபித்துப்போய்ப் பாருங்கள், சமீபித்துப் போய்ப் பாருங்கள் என்று சொல்லும்போது, (மாதர்) பெண்கள் சி என வெறுக்க, (வால்ர்) குழந்தைகள் சி என வெறுக்க, கனவிலே தேர்வருவது போலவும், குதிரை வருவது போல்வும் காட்சிகள் ஏற்பட பெரிய சுடுகிர்டு வா வ்ா என்று கூப்பிட, (வாழ்ந்திருக்கும்) வீடு போ போ என்று வெருட்டி அனுப்ப, (வலது) சாமர்த்தியம் எல்லாம் அழிந்து ஒடுங்க (விரகு அழிய) உற்சாகம் எல்லாம் அழிந்து ஒடுங்க, பேச்சு குழறிப் ப்ோக, கன்கள் சொருகிப்பேர்க், (வாயு மேலிடா) மேல் மூச்சு எழ, உயிர் (உடலைவிட்டுக்) கழியும்நாளில், மனிதர்கள் பல பேச்சுக்கள் பேச. இவர் முடிவோடு நமது எல்லா வளமும் அற்றதென்று சுற்றத்தார்கள் கதறியழ, அறியாமை கொண்ட மாதர்கள் (த்லையில்) அடித்துக்கொண்டு மேலே விழ, என்னுடைய பொருள், என்னுடைய அடிமை ஆள்கள் என்கின்றி அறிவு சிறிதளவும் இல்லாது ஒழிய, ஈக்கள் மொலேல். என்று மொய்க்க, வாயை ஆ என்று திறந்து (உயிர் கழிந்ததும்), ஒடுங்கின ஒலி செய்ம் பன்ற, சிறு பறைகள், (திமிலை) பறைவகை, (தவில்) மேளவகை இவைகள் ஒலிக்கச் சுடுக்ாட்டுப் பிரதேசத்துக்கே (சேர்க்கப்ப்ட்டு)ப் பேய்களாற் குழப்பட்டு எரியில் டப்படும் வாழ்வே இது இத்தகைய வாழ்க்கையை