பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604 தமிழ்நூல் தொகுப்புக் கலை என்பது பாடல். காலத்திற்கேற்ற கருத்துகளை எளிய இனிய வழியில் பரப்புதற்கு ஏற்றது இந்தத் தொகுப்பு. பாடித்தான் பாருங்களேன் - ஆ-இ. பட்டாபிராமன், புதுச்சேரி. வெ.முத்துப்பதிப்பகம், விழுப்புரம், கோமதி அச்சகம், சென்னை, 1985. உ--தமிழா விழித்தெழு, சமுதாய ஒற்றுமை, வருமுன் காப்போம், அமரர் அன்னை இந்திராவுக்கு அஞ்சலி-ஆகிய பெரிய தலைப்புகளின் கீழ்ப் பாடல்கள் உள்ளன. குழந்தைப் பாடல்கள் குழந்தைக் கவிஞர்கள் குழந்தைகட்காக எழுதியுள்ள பாடல் தொகுதிகள் சில காணலாம். மலரும் உள்ளம் ஆசிரியர் அழ. வள்ளியப்பா. வெளியீடு - பாரி நிலையம், சென்னை - முதல் பதிப்பு:1954. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளி யப்பா 1944 இல் 23 பாடல்களுடன் மலரும் உள்ளம் என்ற பெயரில் ஒரு தொகுப்பு வெளியிட்டார். பின்னர், பல இதழ் களில் வந்த பல பாடல்கள் சிறு சிறு வெளியீடுகள் - ஆகியவை யும் சேர்க்கப்பட, இந்தப் பெரிய தொகுப்பு உருவாயிற்று. இதன் வெளியீட்டு விழா, சென்னையில் 1954 - மே - 6 ஆம் நாள் நடைபெற்றது. இதில் ஐந்து பெரும் பகுதிகளும் பல உட்பிரிவுகளும் உள்ளன. மலரும் உள்ளங்களாகிய குழந்தைச் சிறார்கட்கு ஏற்ற வேடிக்கைப் பாடல்கள், கதைப்பாடல்கள், சுதந்திரம் பிறந்த கதை முதலியன உள்ளன. குழந்தைக் குரல் - இது பாப்பாமலர். ஆ அழ. வள்ளியப்பா. வெ. இராம விலாஸ், இராயவரம், புதுக்கோட்டை ஸ்டேட். மதராஸ் ரிப்பன் பிரஸ், இராமச்சந்திர புரம், 1947. கலைமகள் முதல் ரேஷன் காலத்துச் சாமியார் வரை 38 தலைப்புகளில் படங் களுடன் பாடல்கள் உள் ளன.