பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

೩೧5 மொழிகளில் நூல்தொகுப்புக் கலை 57 வரிகள் கொண்ட ஒரு பாடல் எழுதி, இவரது பாடல்களின் அருமையைப் புலப்படுத்தியுள்ளார். 'வில்லான்’ என்னும் பெயரை அனைவரும் நன்கு அறிவர் என்னும் செய்தியால், இவரது இலக்கிய உலகப் புதுப் பெயர் -புனை பெயர் வில்லான்' என்பதாக இருக்கலாம் என்றும், மற்றப் பெயர்கள் இயர்பெயர்-குடும்பப் பெயர்களாக இருக் கலாம் என்றும் நாம் உய்த்துணரலாம். இவரைப் பற்றி வேறொருபுலவர் சிறப்பித்துப் பாடியிருப்பதாகக் கூறப் பட்டிருப்பதும் இங்கே குறிப்பிடப்படத்தக்கதாகும்." இறுதிப் புலவர்-113ஆம் புலவர்: BAUDELAIRE Pierre-Charles Baudelaire, ne'a' Paris, en 1821; more en 1867, “Vous auez cr‘e’ un frisson nouveau” VICTOR HUGO (cite par Theobhlie Grautier dans la Pre“face des Fleur du Mal) இந்தப் பகுதியின் கருத்து வருமாறு: "பியர் ஷார்ல் பொதெலேர்' என்பது இவரது முழுப் பெயர். இவர் பாரிசில் 1821இல் பிறந்தார்; 1867-இல் இறந்தார். இவரை நோக்கி, விக்தொர்ஃபூகோ, என்னும் பேரறிஞர். நீங்கள் பிறர் அதிர்ச்சியடையும்படியான சிறந்த புதிய படைப்பை அளித்திருக்கிறீர்கள், என்று புகழ்ந்திருக் கிறார். இந்தச் செய்தியை, தியோஃபில் கொத்யேர், (Theophile Gautier) erdirayib » West, Fleurs du Ma என்னும் நூலின் முகவுரையிலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக, மாபெரும் புலவர் விக்தொர் ஃபூகோ அவர் களாலேயே பாராட்டப்பட்டிருப்பது, பொதெலேர் அவர் களின் புலமைச் சிறப்புக்குத் தக்க சான்றாகும். இனி இரண்டாவது தொகைநூல் வருமாறு: 2. NOUVELLE ANTHOLOGIE POETIQUE