இயல் தமிழ் இன்பம்
227
பேராட்சியாக (பிரதிநிதியாக) ஆக்கப் பெற்றது. போய், ஆய், உடீஇ, நிலைஇ என்பன சிறு வரவினவாதலின் வாய்பாடு சொல்லப்படவில்லை.
“மங்கை ஒருத்தி தரும் சுகமும்
எங்கள் மாதமிழ்க்கு ஈடில்லை” (பாரதிதாசன்)
“தேருந்தொறும் இனிதாம் தமிழ்போன்று
இவள் செங்கனிவாய்
ஆருந்தொறும் இனிதாய் அமிழ்தாம்
என தாருயிர்க்கே”
(தஞ்சை வாணன் கோவை-பொய்யாமொழிப் புலவர்)
“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு”(குறள் - 783)
“Who entertains the harmless day
with a well – chosen book or a friend”
(Charaeter of The Happy Life by Henry Wotten)
மேற்காட்டியுள்ள பாடல்கள் இலக்கிய இன்பச் சுவையின் சிறப்பினை விளக்குகின்றன. தேர்ந்த இலக்கியப் படைப்பாளர்கள், எந்தச் செயலையும் கலை நயம்பெறக் கூறுவதில் வல்லவர்கள். மகிழ்ச்சிக்கு உரிய செயல் மட்டுமன்று; துன்பத்திற்கு உரிய நிகழ்ச்சியாயினும் அதனைச் சுவைமிக விளக்குவர், எடுத்துக்காட்டுகள் சில காண்போமே:-
அகவை மிகவும் முதிர்த்த முதியவள் ஒருத்தி தன் வாழ்நாளைப் பழிக்கிறாள். நான் இவ்வளவு நாள் வாழ்ந்து