பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656 முருகவேள் திருமுை (10:திருமுறை o ------- - - (2) மலைச்சாரல்களிற் கொடி படரும் மின்னற்கொடியும் படரும் முருகன் என்னும் குை மலை, மீது வள்ளி என்னும் மின்கொடி படர்ந்தது என்க. - -- (3) வள்ளிக்கு அருள் பாலித்த நீ என் அறியாமையைக் கெடுத்து என்னையும் ஆட்கொள்ளல் ஆகாதா என்றபடி 24. திருவருளைப் பெற கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன் அருள் சேரவும் என்னுமதோ - ர்வே ரொடு குன்று தொளைத்தநெடும் பார்வேல புரந்தர பூ பதியே. (அந்) சூர்வேரொடு.பூபதியே கூர்வேல்....... எண்ணுமதோ! (பொ.உ) (சூர்) சூரனாகிய மாமரத்தை வேரளவுக்கும், குன்று) அவனுக்கு அரணாயிருந்த எழுகிரியையும் தொளைத்த - ஊடுருவித் தொளைத்த, (நெடும்போர்) பெரிய போர் செய்யவல்ல, (வேல) வேலாயுதத்தை ஏந்திய கடவுளே! புரந்தரபூ - இந்திரனுடைய உலகத்துக்குப் (பதியே) அரசே! தலைவனே! (நான்) (கூர் வேல் ) கூரிய வேல் போன்ற கண்களை உடைய (மங்கையர்) மர்தர்களின் கொங்கையிலே (சேர்வேன்) சேரும் புத்தியை உட்ையவனா யிருக்கின்றேன்; அத்தகைய என் மனம் (அருள் சேரவும்) உனது திருவருள் கூடுமாறு (எண்ணுமதோ) (எண்ணுமோ) எண்ணும் பாக்கியத்தைப் பெறுமோ! --- (சு-உ) சூரனை அட்ட வேற் பெருமானே! மங்கையர் கொங்கையை எண்ணும் என் மனம் உன் திருவருளை (கு.உ.) αJ மாயையில் வல்ல சூரனை அடக்கிய நீ-மாதர் மாயையிற் படும் என் புத்தியை நன்னெறிப் படுத்தலாகாதா! எனப் பின் இரண்டடிக்கும் முன் இரண்டடிக்கும் பொருத்தம். (2) சூர் வேரொடு - சூரனை அவனுடைய சுற்றத்துடன் - எனவும் பொருள் காணலாம். கிளைபட் டெழுசூர்' என்ற இடத்திற்போல (அநுபூதி 4)