பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 173 ஆநந்தத்தி லாழ்ந்தவராகிய, செவ்வேள் - முருகவேளானவர், இருப்ப எழுந்தருளி உபதேசிக்க, செவி குனித்து - செவியைத் தாழ்த்திக்கொண்டு (எ - று) நித்தர் எழுவாய் சேவித்து நின்றதென் பயனிலை ஏ-அசை (க உ) வள்ளிநாயகியின் முத்தத்தால் மகிழும் குமாரவேள் இருந்து உபதேசிக்க முத்தமிழிலும், வேதத்திலும், சங்கப் பலகையிலும், குற்றாலின்கீழு முதல்வரா யிருக்கிற நித்தியரான பரமசிவன் பணிவோடு நின்று கேட்டதென்ன காரணம்? (கு - உ. சிவபிரான் வணங்கி உபதேசம் பெற்றது - செய்யுள் 19 பார்க்க இந்த 25ஆம் பாடல் ஒரு 'வினாவுரைப் பாடல்; சிவபிரான் ஏன் நஞ்சு உண்டார்? ஏன் கானிடை ஆடுகிறார்? ஏன் எலும்பு பூண்டார் - என்பன போன்ற வினாக்களைச் சம்பந்தப்பெருமான் அவர் பாடிய பதிகங்களில் எழுப்புகின்றார் 4, 6, 7,47,48, 51,137, 138 140, 172, 173, 186, 296 - எண்ணுள்ள பதிகங்களைக் காண்க. அவரைப் பின்பற்றி அருணகிரியார் இந்த அந்தாதிப் பாடலில் வினாவுரை ஒன்றை எழுப்புகின்றார். 26. திருப்புகழ் கேட்டதன் பயன் செவிக்குன்ற வாரண நல்கிசை பூட்டவன் சிந்தையம்பு செவிக்குன்ற வாரண மஞ்சலென் றாண்டது நீண்டகன்மச் செவிக்குன்ற வாரண வேலா யுதஞ்செற்ற துற்றன.கட் செவிக்குன்ற வாரண வள்ளி பொற்றாண்மற்றென் றேடுவதே. (ப-உ)செவிக்கு-என் காதுக்கு உன்-உனது.தவா-தவிராதரண -உரிமையை, நன்கு-கொடுக்கும், இசை கீர்த்தியை பூட்ட அணிய, வன - வலிய, சிந்தை (என்) இருதயமாகிய, அம்பு செதாமரையிலிருக்கும், வி-பட்சியாகிய ஆன்மா, குன்றவருந்துகையில், வாரணம் நின் கோழிக்கொடி யெழுந்தருளி, அஞ்சல் என்று பயப்படாதேயென்று, ஆண்டது - அடிமை கொண்டது, நீண்ட கன்மபெரிதான முன்செய் வினையாலாகும், செசெனனத்துக்கு வித்தாகிய, இக்குன்று இம் மலைபோன்ற, அவா.ஆசையை, ரண-அமர் புரியும், வேலாயுதம்-அயிலானது, செற்றதுகொன்று விட்டது, உற்றன.என் சென்னிமேலே வீற்றிருந்தன, கட்செவி-பாம்பு போன்ற, குன்ற திருச்செங்கோட்டு மலையையுடைய கந்த சுவாமியே!