பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வள்ளுவர், கடுமையான பகையை வெல் லமுடியும், என்று வார்த்தைச் சிலம் பாடி, கற்பாரை நெகிழ வைக்கிறார். ம கிழக் செய்கிறார். தலைப்படுதல் என்பது நிச்சயமாக நடந்தேறுதல் என்றும், நிகழ்ந்து முடியும் என்ற பொருளைத் தருகிறது. - го i. ~ == # - s ** * m ஆகவே, நோற்றலின் ஏற்றமிகு ஆற்றல், ஊக்கமிகும் வலிமை, வல்லமை எல்லாம், தவத்தினைக் குலைக்க வருகிற அகப்பகை, புறப்பகை அனைத்தையும் வென்று, வாகை சூடி, துறவுப் பயணத்தைத் தூய்மைப் பயனாக்கி உதவுகிறது என்று 9வது குறளில், நோற்றலின் வல்லமையின் பெருமையை விளக்குகிறார். 270. இலர் பலராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர் பொருள் விளக்கம்: காரணம் = வலிமை மிக்க ஆன்மாவுடன் நோற்பார் சிலர் - தவம் மேற்கொண்டு ஆற்றுவோர் சிலர்தான். பலர் நோலாதவர் பலர் பொறாமை குணத்தின் தவறு காரணமாகவும் பலர் இலர் ஆன்ம வலிமையில்லாது வறுமையானதின் காரணமாகவும் ஆகிய பலர்நோற்க முடியாதவர்களாகி விட்டனர். சொல் விளக்கம்: இலர் வறுமையானவர் இல்லாமை; தவர் - தவறு பலர் சபை, காரணம் - ஆன்மா; நோலாமை = பொறாமை முற்கால உரை: உலகத்துச் செல்வர்கள் சிலராக, நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாதெனின், அது தவஞ் செய்வார் சிலராக, அது செய்யாதார் பலராதலால் தான். தற்கால உரை: தவமுடையவர் சிலராகவும் தவ மில்லாதவர் பலராகவும் இருத்தற் குக் காரணம், 2 றுதிப்பாடு உடையவர் சில 1ாகவும். உறுதிப்பாடு இல்லாதவர் | 1Q லராகவும் உலகில் இருக்கலேயாகும்.