பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தீது என்றால் ஒருவர் சாதாரண ஒரு தவறான தீமை என்று குறிக்கவில்லை. அவர் அந்தச் செயலைப் பாவம் என்று கருதுகிறார். நச்சுக் காயம் என்றும் கூறுகிறார். காயம் என்றால் பட்ட இடத்திலே வலிக்கும் காயமல்ல. இது பட்டகாயத்தின் வேகம், உடல் முழுவதும் பரவி, இரணமாக்கி, பெருங்காயத்தை ஏற்படுத்துகின்ற காயம். அதைத்தான் ம ரணம் என்ற பொருள் வருமாறு பொறித்திருக்கிறார். 軒 ம என்றால் நஞ்சு, காலம். ரணம் என்றால் காயம். அறிவோர் முன் அநாகரிகமாக, பயனிலவற்றைப் பேசுகிற iணன் ஏற்படுத்துகிற காயம், அந்தக் கால நேரத்தில் ஏற்படுத்தும் நஞ்சுக் 35 TULJ LL). ஆகவே, பயனில் சொல்வது, பயமற்ற தன்மை மட்டுமன்று அது மனத்திலே படுகாயம் ஏற்படுத்துகிற பாவச்செயல் என்று 2வது குறளில் கூறுகின்றார். 193. நயன்இல என்பது சொல்லும் பயன்இல பாரித்து உரைக்கும் உரை பொருள் விளக்கம்: நயன்இல என்பது = நன்மையும் நீதியும் இல்லாதது என்பது சொல்லும் பயன் இல - அர்த்தமற்ற சொற்களால், பயமின்றி வெறுமனே புகழ்ந்து பேசுவது எல்லாம். பாரித்து = குற்றம் மிகுதியுள்ள உரைக்கும் = பாழான முழக்கமாகவே (அவர் பேச்சானது) உரை - அந்த ஒலி வெளியாகும் சொல் விளக்கம்: பாரித்து = குற்றம் சார்த்து; பரப்பல், மிகுதியாதல் உரை - ஒலி, மாற்றுரை, முழக்கம், பாழ். முற்கால உரை: பயனிலவாகிய பொருள்களை ஒருவன் விரித்துரைக்கும் உரைதானே, இவன் நீதியிலன் என்பதனை உரைக்கும். தற்கால உரை: ஒருவன் பயனிலலாதவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகச் சொல்லும் சொற்கள். அவன் எந்த வகையிலும் பயனற்றவனே H 郵 # /ー • _ {IT • - - # ஆவான் எ எபதை உலகிற்குக் தெரிவித்து விடும்.