பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை -- --- _ --- 全f75 முற்கால உரை: புறத்திருள் கடியும் உ லகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்காகா. துறவான் அமைந்தார்க்கு விளக்காவது, மனத்திருள் கடியும் பொய்யாமையாகிய விளக்கே. தற்கால உரை: புறத்து இருள் போக்கும் எல்லாச் சுடர் விளக்குகளும் விளக்குகள் ஆகா. பெரியோர்களுக்கு அகத்திருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே சிறந்த விளக்காகும். புதிய உரை: உண்மைக்குச் சான்றாக விளங்குகிற ஒருவர், அவர் வாழும் வாழ் நாட்கள் எல்லாம் சிறந்த நாட்களாக அமையாது. பொய்மை பொழுதுதான் அவர் வாழும் நாள், பெருமையும் புதுமையும் பெறுகிறது. கலவாத மெய்யான சொற்களை பேசும் விளக்கம்: வி 2. صي Kr. o +. an .ெ so * or or , , H. Ç ; , வ:ளககு எனறது.ப. ஞாயறு, தங்கள தபபநதம, அகல வளககு என்பனவற்றைத்தான் எல்லோரும் பொருள் கொண்டு இருக்கின்றனர். இவ்வளவு சின்ன விஷயத்தையா வள்ளுவர் பெரிதாக எடுத்துக் கொண்டு பாடியிருப்பார் என்று எண்ணுகிற போது, ஏதோ உட்பொருள் ஒன்றை ஒளித்து வைத்து இருக்கிறார் என்றே எண்ணத் தோன்றியது. அந்தத் துண்டலின் விளைவாகத் ஆய்வைத் தொடர்ந்தபோது, விளக்கு என்ற சொல்லுக்கு நாள் என்றொரு பொருள் கிடைத்தது. நாள் என்றால், புதுமை, இளமை, நன்னாள் என்றெல்லாம் பல பொருள்கள் இருக்கின்றன. வாய்மையைப் பின்பற்றுகிறவர்கள் ஒரு நாளைக்கு அல்ல. ஒவ்வொரு நாளும் வாய்மை பேச வேண்டும் என்று வள்ளுவர் விரும்புகிறார். அப்படி பேசுகின்ற நாட்கள் தான் மேன்மையான நாட்கள். வாய்மை தவறினால் அது வீணான நாட்கள். ஞாயிறும், திங்களும், தீப்பந்தமும், அகல் விளக்கும் புற இருளைப் போக்கிப் புதுமையை விளைவிப்பதுபோல, அக இருளையும் வாய்மையால் போக்குங்கள். உயர்ந்த உலகத்தை உருவாக்குங்கள் என்று வாய்மையாளர்களின் வாழ்நாட்களுக்கு வரலாறு படைக் கிறார் வள்ளுவர். 300. யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற பொருள் விளக்கம்: இல்லை - இம்மையாகிய இப்பிறப்பில் யாம் கண்டவற்றுள் நம்மால் காணப்பட்ட பெருள்கள் எல்லாவற்றிலும்