பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை ᎼᏮ3 புதிய உரை: அவாவை வெறுத்து அழிப்பது என்பது அற்புதமான வாழ்க்கையைத் தரும், அப்படி வாழ்கின்ற சுகக்காலத்துக்கு ஈடானது வேறு எங்குமில்லை. எதுவுமில்லை. விளக்கம்: அவாவை அழிக்க முயற்சிக்கிறவனுக்கு ஆற்றல் பெருகி வருகிறது. அவனது வாழ்வில் அளவிடற்கரிய இன்பம் வந்து நிறைகிறது. அதனால் அவனது அன்றாட வாரு | ம் நாட்கள் சுவையாகப் பிறந்து, சுகமாக வளர்ந்து, சொர்க்கமாக மாறிவிடுகி l)து. அதைக் குறிக்கவே விழுச்செல்வம்' என்றார். அப்படி வாழுகின்ற சுகமானகாலம் சொல்லற் கரிய விழா - i. i. எடுத்துக் கொண்டாடுவதுபோல, அவனை வா ழ் விக்கும் என்று மூன்றாம் குறளில் அவா அறுத்தலினால் வரும் அமுத வாழ்க்கையைக் குறித்துக்காட்டுகிறார். 364. தூய்மை என்பது அவா.இன்மை மற்றஅது வாய்மை வேண்ட வரும் பொருள் விளக்கம்: தூய்மை என்பது - பரிசுத்தமான மெய் வாழ்க்கை என்பது அவா இன்மெய் = ஆசைப்படாத உடம்பேயாகும் மற்றது = மற்றய இன்பங்கள் எல்லாம் வாய்மை = உண்மையாக வாழும்போது வேண்டவரும் விரும்புவது போல வந்த சேரும் - - - - - i(ib புவது V 5լ 1 Ո ՕՆ) வநத சேரும சொல் விளக்கம்: தூய்மை = பரிசுத்தம்; அவா இன்மை = ஆசையில்லாத உடல் வாய்மை = உண்மை முற்கால உரை: ஒருவருக்கு வீடென்று சொல்லப்படுவது அவாயில்லாமை. அந்த அவாயில்லாமைதான், மெய்மையை வேண்டத்தானே உண்டாம். தற்கால உரை: தூய்மையென்று சிறப்பித்துச்சொல்லப்படுவது, அவாயின்மை யாகும். அவாயின்மையானது உண்மையை விரும்புவதின் மூலம் வருவதாகும்.