பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விளக்கம்: வளி என்றால் காற்று என்றும், வழங்கும் என்றால் இயங்குகின்ற, விசிறுகின்ற, மாஞாலம் என்றால் பெரிய உலகம் என்றும் கரி என்றால் சான்று என்றும் முந்தையோர் பொருள் கொண்டார்கள். மேலே கூறிய 6 சொற்களுக்கும் வேறுபல ஆர்த்தங்களும் உள்ளன. வளி என்பதற்கு உலகில் வீசுகின்ற காற்று என்பதை விட, உடலில் உயிர்ப்புடன் உலாவரும் உயிர்க்காற்று என்று பொருள் கண்டிருக்கிறேன். aussi grešrpfreb ainuț, cumu, grašipsico Vital Air in the System உடலில் உள்ள முக்கியமான காற்று. இந்த உயிர்க்காற்று தான் 10வகைக் காற்றாகப் பிரிந்து உடலை பராமரிக்கிறது. பாதுகாக்கிறது. பலம் சேர்க்கிறது. வளம் சேர்க்கிறது. அழகு சேர்க்கிறது. 1. கிராணன்: இதயத்துடிப்பையும் சுவாசத்தையும் கட்டுப்படுத்துகிறது. 2. அபானன்: சிறு நீர் மற்றும் உடல் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றுகிறது. 3. சமானன்: ஜீரணப் பணிக்கு சிறப்பாக உதவுகிறது. 4. உதானன்: உணவு, உயிர்க்காற்றை உட்கொள்வதை சரிசெய்கிறது. 5. வியானன்: உணவு சக்தியை காற்றுடன் உடலெங்கும் பரிமாறுகிறது. 6. நாகா: ஏப்பத்தை ஏற்படுத்தி, வாய்வை வெளியேற்றுகிறது. 7. குர்மான்: இமைகள் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது 8. கிரிகாரன்: தும் மல் இருமலை ஏற்படுத்தி, வேண்டா தவைகளை வெளியேற்றுகிறது. 9. தேவதத்தன்: கொட்டாவி மூலம் நிறைய காற்றை உட்கொள்ளச் செய்கிறது. 10. தனஞ் செயன்: இறந்த பிறகும் உடலில் இருந்து. இறுதியாக வெளியேறும் வீங்கல் காற்று.