பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702 தமிழ்நூல் தொகுப்புக் கலை மா மெளன மணிக்கோவை என்ற மெய்ஞ்ஞான அநுபூதி ரசம் ஆ - பெரிய குளம் மெளன குரு சுவாமிகள். மீனாம்பிகை அச்சியந்திர சாலை, பெரிய குளம். 1920. அநுபூதிப் பதிகம் முதல் வாடா மலரின் அலங்காரம் வரையான 138 தலைப்பு களில் பல தொகுப்புகள் உள்ளன. நல்லாற்றுார்ச் சிவப்பிரகாச அடிகளார் பிரபந்தத் திரட்டு சிவப்பிரகாச அடிகளார் தம் வாழ்நாளின் இடைக் காலத்தில் துறைமங்கலம் என்னும் ஊரில் இருந்தமையால் ‘துறைமங்கலம் சிவப்பிரகாசர்"எனப் பெயர் வழங்கப் பெற்றார். இறுதிக் காலத்தில் தென்னார்க்காடு - நல்லாற்நுார் என்னும் ஊரில் தங்கியிருந்து அங்கேயே அடக்கம் ஆனதால் நல்லாற் றுர்ச் சிவப்பிரகாசர் எனப் பின்பு பெயர் வழங்கப் பெற்றார். இவரது காலம் 17 ஆம் நூற்றாண்டு. வீரசைவராகிய இவர் பல நூல்கள் இயற்றியுள்ளார். இத் திரட்டு தொடர்பான சில பதிப்புகளைக் காண்பாம்:சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத் திரட்டு ஆய்வு: சிதம்பரம் - ஈசானிய மடம் - இராமலிங்க சுவாமி. கலாரத்நாகர அச்சுக் கூடம் - இரண்டாம் பதிப்பு. பராபவ - தை. இப்பதிப்பில், சோன சைல மாலை முதலாக இஷ்ட லிங்க அகவல் ஈறாக 22 நூல்கள் இடம் பெற்றுள்ளன. சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத் திரட்டு (அரும் பொருள் விளக்கத்துடன்) பதிப்பு: பாகனேரி காசி விசுவநாதன் செட்டியார். செட்டி யாரின் பதிப்புரைநாள்: 1-11-1941. விசு-ஐப்பசி. கிடைக்கு மிடம்: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. வெளி யீடு: பாகனேரி தன வைசிய இளைஞர் தமிழ்ச் சங்க வெளியீடு - 8. அரும் பொருள் விளக்கம் உண்டு. உள்ளுறை: சோ ண சைலமாலை முதல் திருவெங்கை மான்மியம் வரையிலான 24 நூல்கள் இதில் உள்ளன. மற்றும் ஒரு பதிப்பு பெரு மாத்தூர் சபாபதி அய்யர், சிவப்பிரகாசர் இயற்றிய