பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க 軒 * * so H 藝 GR) &l JHT 254 டாக்டர் எஸ். நவராஜ் செல்ை கண்ணில் உள்ள பீழையை விமர்சிக்காதே என்னும் உயர்ந்த கருத்தை 6 வது குறளில் கூறுகிறார். 187. பகச்சொல்லிக் கேளிர் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். பொருள் விளக்கம்: நகச்சொல்லி - தனது உறவினரான ஒருவர் மகிழும்படி பேசி நட்பாடல் = நெருங்கி நட்பாக இருப்பதை தேற்றா = சகித்துக் கொள்ள முடியாத தவர் அவருக்கு வேண்டியவர்களே பகச்சொல்லி - அவரிடமிருந்து மற்றவரது நட்பை பிரிந்து போகும்படி கேளிர்ப் பிரிப்பர் - அவரது சுற்றத்தாரே பிரித்து விடுவர் சொல் விளக்கம்: பகச்சொல்லி - பிரிக்கும் படியான கருத்துக்களைக் கூறி கேளிர் = உறவினர்; நகச்சொல்லி = மகிழும்படியாகப் பேசி தவர் - தமர். மிகவும் வேண்டியவர் முற்கால உரை: மகிழும்படி சொல்லி, சிநேகம் செய்தலை அறியாதவர் புறங்கூறி உறவினரைப் பிரிப்பர். தற்கால உரை: நண்பர்களோடு கொள்ளும் நட்புறவினால் ஏற்படும் நன்மைகளை அறியாதவர்கள் தாம், நண்பர்களைப் பற்றிப் புறங் கூறிப் பின்னர், அவர்களை விட்டுப் பிரிந்துபோய் விடுவார்கள். புதிய உரை: ஒருவர் வாழ்க்கையில் உயர்கிறபோது, அதை மகிழ்ச்சியுடன் பாராட்டிப் பேச மனமில்லாது, பொறாமை கொண்ட காரணத்தால், அவரது உறவினர்களே பலவாறாகக் கூறி அவரையே பிரித்து விடுவார்கள். (ஒதுக்கி விடுவார்கள். ஒதுங்கியும் போவார்கள்) விளக்கம்: ஒருவர் மேல் பொல்லாப்புடன் புறங்கூறி மகிழ்பவர் ஒருவகை. பிறரது மனத்தைப் புண்படுத்தி, பேதலிக்கச் செய்து