பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டுத் தொகை 205 சிறப்புமிக்கதாய் மிளிர்வதாலும், இஃது இரண்டாவதாகவும் நற்றிணை மூன்றாவதாகவும் நிரல் செய்யப் பெற்றது. எனவே, இறையனார் அகப்பொருள் உரையின் வரிசை முறையே பொருத்தமானது என்பது புலப்படும். அவையாவன: நெடுந் தொகை முதலாகிய தொகை எட்டும் என்றவாறு'. என்னும் பேராசிரியரின் (தொல்-செய்யுளியல்-236) உரைப் பகுதியும் 'அவ்வகை என்றதனான் அவை வேறு வேறாக வந்து ஈண்டிய தொகைநிலைச் செய்யுளென்றுணர்க; அவை நெடுந்தொகை முதலிய தொகை யெட்டுமாம்' - என்னும் நச்சினார்க்கினிய ரின் (செய்யுளியல்-236) உரைப் பகுதியும் ஈண்டு ஒப்புநோக் கற்பாலன. இனி, நாமும் இந்த ஆராய்ச்சி நூலில் இந்த வரிசை முறையினையே பின்பற்றுவோமாக! தொகுத்தவரும் காலமும்: எட்டுத் தொகை நூல்களையும் பற்றிப் பின்னர்த் தனித் தனித் தலைப்பின்கீழ் விளக்கமாக ஆராயப்போகின்றோமாயி னும், இவை பற்றி இங்கே பொதுவாகச் சில கருத்துக்களை ஆராயவேண்டியுள்ளது. இந்த எட்டு நூல்களையும் தொகுத் தவர் யார்? தொகுத்த காலம் எது?-என முதலில் ஆராய வேண்டும். தொகுத்தவர்கள் கடைச்சங்க காலப் புலவர்களும் அரசர்களும் ஆவர்; எனவே, தொகுத்த காலம் கடைச்சங்க காலம் என்பது தானே விளங்கும். இதற்குரிய சான்று வரு மாறு: பத்துப் பாட்டைத் தொகுத்தவர்கள் கடைச்சங்கத்தார்கள் என்பதை, மலைபடுகடாம் - நச்சினார்க்கினியர் உரையி லுள்ள, 'இவர் செய்த செய்யுளை (மலைபடு கடாத்தை) நல்லி சைப் புலவர் செய்த ஏனைச் செய்யுள்களுடன் சங்கத்தார் கோவாமல் (தொகுக்காமல்) நீக்குவர்; அங்ங்னம் நீக்காது கோத்தற்குக் காரணம், ஆனந்தக் குற்றம் என்பதொரு குற்றம் இச்செய்யுட்கு உறாமையான் என்றுணர்க”-என்னும் பகுதியால் அறியலாம் என்னும் செய்தி முன்னரே கூறப்பட்டுள்ளது. பதினெண் மேற்கணக்கைச் சேர்ந்த பத்துப் பாட்டைத் தொகுத்தவர்கள் கடைச்சங்கத்தார்கள் எனில், அதே மேற் கணக்கைச் சேர்ந்த எட்டுத்தொகை நூல்களையும் தொகுத்த வர்களும் அவர்களாகத்தானே இருக்க முடியும் இதற்குப்