பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை DOエ சொல் விளக்கம்: பகுத்தல் வகுத்துத் தெளிவாய்க் கூறுதல்; உண்டு உள்ளது ஒம்புதல் தீதுவராமல் காத்தல்; தொகுத்து ஒழுங்காக்கி வற்றுள் - வண்மை, கருத்து முற்கால உரை:

  • _ - | 睡 o 睡 # * 睡 * m - # # -- *...* உண்பதனை பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு, ஐவகை உயிர்களையும் ஒம்புதல், அறநூல் உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையாய அறம். தற்கால உரை:

கிடைத்த உணவைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு, அப்படிப் பல உயிர்களையும் காப்பாற்றுதல் என்பது அறநூலோர் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையாகிய அறம் ஆகும். புதிய உரை: தெளிவாய் வகுக்கப்பட்டுள்ள அறநெறிகளைக் கற்றறிந்தார் அளவு படுத்திய கருத்துக்கள் யாவற்றிலும் தீதுவராமல் எல்லா உயிர்களையும் காப்பாற்றி வளர்த்தல் சிறந்ததாகும். விளக்கம்: பகுத்துண்டு என்ற உடனேயே, உணவைப் பகிர்ந்து உண்டு என்றுதான் மேலோட்டமாக எண்ணி, உரை எழுதி இருக்கின்றார்கள். பல உயிர்களையும் தீது வராமல் காப்பாற்றுவதுதான் முக்கியம் என்பதால், உணவைப் பகிர்வது என்பது சிறப்பாக இல்லை. உண்டு என்றதும் உள்ளது என்ற அர்த்தத்தை விட்டுவிட்டு, உண்டி என்ற எல்லோரும் எண்ணி விட்டனர். புதிய உரையாக அறிஞர்கள் தொகுத்த கருத்து (வற்று)க்கள் எல்லாவற்றிலும், பிற உயிர்களுக்கு இன்னா செய்யாமல், உயிர்வாதை இல்லாமல் பாதுகாப்புத் தருவதே பெருஞ்செயலாகும் என்பதால்தான் வள்ளுவரும், ஒம்புதல் என்ற வார்த்தையைச் சொல்லியிருக்கிறார். 323. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சார பொய்யாமை நன்று பொருள் விளக்கம்: ஒன்றாக - நிச்சயமாக கல்லது நன்மைபயக்கும் ஒழுக்கமானது