பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 4 / வாழ்வின் மூச்சு என்று நடப்பவனாக ஒருவன் இருக்கிறான் என்றால், ஆயிரமாயிரம் ஒழுக்கங்களும், கீர்த்திகளும் அவனைத் தேடிக் கொண்டுவரும். அவனை வான் புகழுக்கு வழி நடத்தும், வற்றாத செல்வங்களுடன் வாழ்விக்கும், ஆக, பொய் தெரியாது வாழ்வது ஒரு பேராண்மை என்று வள்ளுவர் ஒரு புரட்சிக் கருத்தை இந்தக் குறளிலே புகுத்தி இருக்கிறார். 297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று பொருள் விளக்கம்: பொய்யாமை = வாய்மை தவறாமல் பொய்யாமை = புனைவேடம் போடாமல் ஆற்றின் = வாழ்ந்து காட்டுகிறபோது பிற அறம் = மற்றைய ஒழுக்க நெறிகளை செய்யாமெய் = செய்யாத தேகமும் செய்யாமை = செய்யாமல் தவிர்த்து வாழ்தலும் நன்று - நல்வினையாகவே ஆகிவிடுகிறது. சொல் விளக்கம்: பொய்யாமை = வாய்மை தவறாமை பொய்யாமை = புனை வேடம்; செய்யா மெய் = செய்யாத தேகம் நன்று = நல்வினை முற்கால உரை: ஒருவன் பொய்யாமையையே, பொய்யாமையையே செய்ய வல்லானாகின் அவன் பிற அறங்களைச் செய்யாமையே, செய்யாமையே நன்று. தற்கால உரை: ஒருவன் எப்பொழுதும் பொய் யாமையாகிய அறத்தைப் போற்றிக் கடைப் பிடித்து வருவானேயாகின், அவன் எப்பொழுதும். மற்ற அறங்களைச் செய்யாவிட்டாலுங் கூட அவன் நன்மையையே அடைவான். புதிய உரை: வாய்மை தவறாமல், புனைவேடம் போடாமல் வாழ்ந்து காட்டுகிற ஒருவருக்கு, மற்ற ஒழுக்கங்களைச் செய்ய

தவிர்த்துவிட்டாலும் கூட அதுவும் அவனுக்கு கல்வினையாக o "I" – on ஆகிவி り。 கறது =