பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 தமிழ் நூல் தொகுப்புக் கலை பரிய தண் தமிழால் தெரிந்த பாடல், - 2058, ஒளிர் பூந் தமிழ் மாலை - 2101, தாழு மனத்தால் உரைத்த தமிழ் கள்-2112, செறிவண் தமிழ் செய்மாலை-2156, மறை வளரும் கமிம்மாலை - 2199, இசையால் உரைக்க தமிழ் மாலை-2420, ஒண் தமிழ்களின் அணி கொண்ட பத்து-2431, சந்கம் ஆர்ந்து அழகாய தண் தமிழ் மாலை-2441. சந்த மாயின பாடல் தண் தமிழ்-2485. சந்துலாந் தமிழ் மாலை - 2658. ஆய்ந்து சொன்ன அருந் தமிம்கள் - 2713. வல்லவாறே புனைந்தேக்கம்.வண் கமிம்-2738, செல்வராக நினையும்படி சேர்க்கிய செந் கமிம்-2779. விலையுடை அருந்தமிழ் மாலை. 2844, ஆய்க்க ஒகிய ஒண்தமிழ்-2899, சொல் தமிழ் இன்னிசை மாலை-2975, ஏரினார் தமிழ்-3128, ஒண் தமிழ் நூல் இவை பக்க - 3513, பழுகில் இறை எழுது மொழி தமிழ் விரகன்-3525, எந்கை அடி வந்தனுக சந்கமொடு செந் தமிழ், மயிலாடு தறையைப் புணர்ந்த தமிழ்-3558, சங்க மவி செந்தமிழ்கள்3602, சிந்தையுளிடை பெற உரை செய் தமிழ் - 3755, பண் உலாம் அருந்தமிழ் -3777, உறும் பொருளால் சொன்ன் ஒண் தமிழ்-4147 - முதலியனவாம். சம்பந்தர் தம்மை, தமிழ் ஞான சம்பந்தன், தமிழ் விரகன் என்றெல்லாம் பல பாடல்களில் கூறிக்கொண்டுள்ளார். மற்றவர் பாடல்களில் உள்ள தமிழ் முழக்கத்தையும் கூறவேண்டு மாயின் மிகவும் விரியு மாதலின் இவ்வளவோடு அமையலாம். பதி வாரித் தொகுப்பு மூவர் தேவாரங்களும் தனித் தனியாக - அவரவர் பெய ரால், பண் வாரியாகவும் பதி(தலம்) வாரியாகவும் தொகுக்கப் பெற்ற பதிப்புகள் சில-பல உள்ளன. திருப்பனந்தாள் காசி மடத்து அடிகளாரால் முழு அடங்கல் முறையாக-மூவர் தேவராங்களும் பதிவாரியாகத் தொகுப்பிக்கப்பட்டுள்ளன. இதன் பதிப்பாசிரியர் டி.எம். குமர குருபரன் பிள்ளை. இந்தப் பதிப்பில் உள்ள சிறப்புக் கூறாவது: ஒர் ஊரை எடுத்துக் கொள்ளின், அவ்வூரின்மேல் சம்பந்தர் பாடியுள்ள பதிகம் (பதிகங்கள்) முதலிலும், அடுத்து நாவுக் கரசரின் பதிக