பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்து 315 பாடலாகத்தானே இருக்கக் கூடும்? பதிற்றுப்பத்தின் பதிகப் பாடலை முதற்கொண்டு எடுத்தாளும் நச்சினார்க்கினியர், அந் நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலை எடுத்தாண்டிருப்பதில் வியப்பேது மில்லை. 'இது பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலெனில், இப்பாடலின் கீழே பதிற்றுப் பத்து' என நூலின் பெயரை நச்சினார்க்கினியர் குறிப்பிட்டிருப்பாரே? - எனச் சிலர் வினவலாம். நூற்பெயரைக் குறிப்பிடும் வழக்கம் அவரிடம் மிகவும் உண்டெனினும், சில இடங்களில் அவர் குறிப்பிடா மலேயே சென்றுள்ளார். மற்றும், இந்தக் கடவுள் வாழ்த்துப் 'பாடல், பதிற்றுப் பத்தைச் சேர்ந்த நூறு பாட்டுக்களுள் ஒன்றன்று ஆதலானும், தனியாக வேறொருவரால் இயற்றிச் சேர்க்கப்பட்ட தர்தலானும், இந்தப் பாடலைப் பதிற்றுப் பத்து' என்னும் நூற்பெயரால் குறிப்பிடாது விட்டார் போலும்! எனவே, நச்சினார்க்கினியர் வரைந்துள்ள உரைப் பகுதியின் சூழ்நிலையை நன்கு ஆராய்வார்க்கு, இப் பாடல் பதிற்றுப் பத்தின் கடவுள் வாழ்த்தே என்பது விளங்காமற் போகாது. பாடலையே பனிமூட்டம் சூழ்ந்துள்ளபோது, அதன் ஆசிரி யர் பெயரை எவ்வாறு அறிவது? இந்தப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் தலையில் கட்டி விடலாமா? ஏன் செய்யக் கூடாது? இதற்குமுன் பேசப்பட்டுள்ள ஐந்து தொகை நூல்களின் முன்னால் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்கள் பாரதம் பாடியபெருந்தேவனாரால் பாடப்பட்டிருக்கும்போது, ஆறாவது தெள்கை நூலாகிய பதிற்றுப் பத்தின் கடவுள் வாழ்த் துப் பாடல் மட்டும் ஏன் இவருடையதாக இருக்க முடியாது? இவரால் பாடப்பட்டனவாகிய 'கார்விரி கொன்றைப் பொன்னேர். புதுமலர்த் தாரன்’ என்று தொடங்கும் அக நானுாற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலையும், ‘கண்ணி கார் நறுங் கொன்றை கார்வண்ண மார் பின் தாரும் கொன்றை’ என்று தொடங்கும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாட லையும் ஊன்றி நோக்கி, அவற்றின் அமைப்பினை ஆராய்ந்து காணின், பதிற்றுப் பத்தின் கடவுள் வாழ்த்தாகக் கருதப்படும்