பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் 439 கருத்தையும், சொல் சொற்றொடர் ஆட்சிகளையும் கூர்ந்து நோக்கின், எவரும் இவ்வாறு கூற முடியாது. திருமூலர் பல் லாண்டுகள் வாழ்ந்தவர்.பலரினும் பழமையானவர் என்று கூறலாம். எட்டாம் நூற்றாண்டினராகிய சுந்தரர், தமது திருத் தொண்டத் தொகை என்னும் தலைப்புடைய தேவாரப் பாடலில், 'நம்பிரான் திரு மூலன் அடியார்க்கும் அடியேன்” என்று பாடியிருப்பதால், திருமூலர் எட்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் என்பது உறுதி. இன்னும் முற்பட்ட காலத்தில் திருமந்திரம் மாலையாக்கப்பட்டிருக்கலாம். பதினோராம் திருமுறை பதினோராம் திருமுறை என்னும் தொகுப்பு, சைவத் திரு முறைகள் பன்னிரண்டனுள் பதினோராவதாகும். இதனா லேயே இது பதினோராம் திருமுறை என்னும் தொகைப் பெயர் பெற்றது. இதனுள், பன்னிருவர் இயற்றிய நாற்பது சைவ நூல்கள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர் பெயர்களும் நூற்பெயர்களும் முறையே வருமாறு: 1. திருவாலவா யுடையார் I திருமுகப் பாசுரம் 2. காரைக்கரில் அம்மையார் திரு ஆலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் திரு இரட்டை மணிமாலை . 4. அற்புதத் திருவந்தாதி 3. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 5. rேத்திரத்திரு வெண்பா 4. சேரமான் பெருமாள் நாயனார்

6. பொன் வண்ணத் தந்தாதி திருவாரூர் மும்மணிக் கோவுை. 8. திருக் கைலாய ஞான உலா(ஆதிஉலா) 7.