பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22சீவக சிந்தாமணி



“அவன் உயிரோடு இருக்கிறானா? அவன் என்ன செய்கிறான்?”

“ஏறக்குறைய உன் வயதுதான் இருப்பான். அவன் எங்கே வளர்கிறானோ என்ன செய்கிறானோ அவன் தாய் என்ன ஆனாளோ எதுவும் தெரிய வாய்ப்பில்லை” என்றார்.

“ஐயா! அவன் இருக்குமிடம் சொன்னால் அவனை அழைத்து வருவேன்; இவனை எதிர்த்து ஆட்சியை அவனிடம் ஒப்புவிப்பேன்; மக்களைப் புரட்சி செய்யச் சொல்லித் துண்டி விடுவேன்” என்றான்.

“அவசரப்படாதே; இன்னும் ஒரு வருஷம் போகட்டும்; அதற்குப் பிறகுதான் இவனை எதிர்க்க முடியும்” என்றார்.

“முதலில் அவனை எப்படித் தேடுவது? அதைச் சொல்லுங்கள்” என்றான்.

“நீ நேரே வீட்டுக்குப் போ; நிலைக் கண்ணாடி முன் நில், அதில் ஒருவன் நிழலாடுவான். அவன்தான் அந்த இளைஞன், அரச மகன்; சீவகன்” என்றார்.

“அவசரப்படாதே; நீ இப்பொழுது கந்துக்கடனின் மகன்; பிறப்பால் அரசமகனாயினும் அதற்கு வேண்டிய சிறப்புகள் உன்னிடம் இல்லை; அதற்கு வேண்டிய தகுதிகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்; அரச மகளிரை மணந்து அவர்கள் துணை கொண்டு படை திரட்டி அவனை எதிர்க்க வேண்டும். நீ இப்பொழுது தனி மனிதன்; தனிமரம் தோப்பாகாது; படைத்துணை இல்லாமல் அவனை எதிர்க்க இயலாது; காலம், இடம், துணைவலி மூன்றும் சேரும்போது எதிர்க்கவேண்டும்” என்று அறிவுரை கூறி அவனை விட்டுப் பிரிந்தார்.

அவர் தம் வரலாற்றை அவனுக்கு எடுத்துக் கூறினார். வெள்ளிமலை என்னும் பகுதியில் வாரணவாசி என்னும்