பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணமாலையார் இலம்பகம்97



“ஏன் அவனை உயிரோடு அழைத்து வரவில்லை” என்றான்.

“திமிறினான்; அதனால் தீர்த்து விட்டேன்” என்றான்.

“அதுவும் நல்லது தான்; இங்கே வந்தால் கோவலனைக் கொன்ற பழி நம்மை வந்து சேரும்” என்றான்.

“அவன் முகத்தையாவது காட்டி இருக்கலாமே” என்றான்.

“அவன் முகத்தில் நீங்கள் விழிப்பதை நான் விரும்ப வில்லை” என்றான்.

சுதஞ்சணன் சீவகனால் உதவப்பட்டவன். இராசமாபுரத்தில் சாபத்தின் விளைவாக அவன் ஒரு சொரிநாயாகத் திரிந்து கொண்டிருந்தான். அந்த நாய் சோற்றுப் பானையில் தலையிட்டு எச்சில் படுத்தியது. அதற்கு உரிய வேள்வி அந்தணர் கேள்வி கேட்பவர் இல்லாமல் அடித்துத் துரத்தினர். அது அங்கிருந்து குளத்தில் விழுந்து உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தது. சீவகன் கருணையோடு அதை எடுத்து மந்திரம் ஒதி நல்வாழ்வு அளித்தான். அதனால் அவன் சாபம் தீர்ந்து தன் வித்தியாதர உலகை அடைந்தான்.

ரயில் பணத்தில் டிக்கட்டு இல்லாமல் பயணம் செய்த போது அவனுக்கு உதவிய பயணியின்பால் கொள்ளும் நட்பு இருவரிடம் மலர்ந்தது.

எப்பொழுது வேண்டுமானாலும் தன்னை நினைத்தால் தான் வந்து உதவுவதாக அவனுக்கு உறுதி அளித்திருந்தான்.

தினைத்துணை செய்த நன்றியை அவன் பனைத்துணையாகக் கொண்டான். அந்த நட்புதான் இவனுக்கு இப்பொழுது கைகொடுத்தது.