இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34
அன்பு அலறுகிறது
யில் இரண்டும் போதாமல் உன்னைப் போன்ற பெண்களுக்கு நடுவே அகப்பட்டுக் கொண்டு, தன்னையும் காக்கமுடியாமல் தருமத்தையும் காக்க முடியாமல் அவன் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறான்!”
"இப்போது நீங்கள் அப்படியாத் தவிக்கிறீர்கள்?’’
"ஆமாம் லலிதா! இரண்டாவது மனைவியான உன்னுடன் என் வாய் பேசிக் கொண்டிருக்கும்போது, என்னுடைய முதல் மனைவியின் குரல் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது!”
"சரிதான், அன்பு அழுகிறதாக்கும்?”
"ஆமாம். அவளை நினைத்தால் அன்பு அழுகிறது; உன்னை நினைத்தால் அன்பு சிரிக்கிறது!”
"என்னமோ, கடைசியில் அது புரட்சியில் வேறு இறங்கித் தொலைக்காமலிருந்தால் சரி!"
"அதென்ன புரட்சி?”
"அன்புப் புரட்சிதான்!”
"அப்படி யென்றால்?”
"செய்யும் அயோக்கியத்தனங்களை யெல்லாம் அக்கம் பக்கம் தெரியாமல் செய்துவிடுவது!"
அவர் சிரித்தார்; நானும் சிரித்தேன்.