பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

33

அதற்குள் என்னைச் சமாளித்துக்கொண்டு, "நல்லவர்கள் பொல்லாதவர்களாயிருப்பதுதானே இயற்கை?" என்றேன் நான்.

"உண்மை லலிதா, உண்மை. இல்லாவிட்டால் எடுத்த எடுப்பிலேயே என் கன்னத்தில் நீ அறைந்திருப்பாயா?" என்றார் அவர்.

இது எனக்கு என்னவோபோல் இருந்தது."ஆமாம் போங்கள்!” என்று முகத்தைச் சுளித்தேன்.

அவர் சிரித்துக்கொண்டே ஒரு கணம் என்னை உற்றுப் பாாத்தார். மறுகணம், "நமது சிற்பிகளும் சித்திரக்காரர்களும் இருக்கிருர்களே, அவர்கள் எத்தனையோ விதமான பெண்களைப் படைக்கிறார்கள். ஆனால் முகத்தை மட்டும் எல்லாப் பெண்களுக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக அமைத்துவிடுகிறார்கள். பிரம்மன் அப்படி அமைப்பதில்லை. எத்தனையோ பெண்களை அவனும் படைக்கிறான். ஆனால் ஒரு பெண்ணின் முகத்தைப்போல் இன்னொரு பெண்ணின் முகத்தை நாம் பார்க்கமுடிவதில்லை!" என்றார், கண்களில் சிந்தனை தேங்க.

"அதனால் என்னவாம்?" என்றேன் நான்.

"ஒன்றுமில்லை; மனிதனின் தலையைத் தருமம் காப்பதற்குப் பதிலாகத் தருமத்தின் தலையை மனிதன் காக்க வேண்டியிருக்கிறது!"

"அதற்குத்தான் 'மனம்’ என்று ஒன்றைக் கடவுள் மனிதனுக்குக் கொடுத்திருக்கிறாரே?”

"அதுவும் போதாதென்று 'மானம்' என்று ஒன்றை வேறு மனிதன் கண்டுபிடித்தான். கடைசி