பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 சந்திரனும் பாம்பும் தம்மிற்பகையா யிருக்கவும் அவற்றைப் பகை தீரச் சூடிய அ ரு ள | ள ர் என அறிவுறுத்தவாரும். பாம்பொடு திங்கட் ப ைகதீர்த் தாண்டாய் என்பது திருத்தாண்டகம். போரு ளாளாகிய இறைவர் எமககு இரங்காதிரார் என்பார் 'இறைவர் எமக்கு இரங்காரேனும்’ என்ருர், நிச்சய மாக அருள்செய்வர் என்பது குறிப்பு. தையா உள்ளம் - பொத்துப்படாத உள்ளம்; ஒட்டையில்லாத உறுதி யான மனம் என்பது பொருள். தைத்தல் - துளே படுதல். இனி தயாவுள்ளம் என்பதே அகரத்திற்கு ஐகாரம் போலியாய், ைத ய வு ள்ள ம் என நி ன் ற து என்பர் சிவக்கவிமணி. இதுவன்றே யீசன் திருவுருவ மாமா றிது வன்றே யென்றனக்கோர் சேமம் - இதுவன்றே மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனே க்கே யின்னுஞ் சுழல்கின்ற திங்கு. (24) இ-ள்: மின்னுகின்ற சுடரொளிப் பி ழ ம் ப ய் நின்று (கட்புலகைப்) புறத்தே விளங்கித்தோன்றி மீளவும் எனது சிந்தையின்கண் வந்து வீற்றிருந் தருளும் பெருமானே, ஈசனகிய நினக்குரிய திருவுருவ மாவது சுடர் விட்டு விளங்கும் இதுவேயன்ருே? (அடியேனகிய) எனக்குரிய ஒப்பற்ற சேமநிதியாக விளங்குவது அருளுருவாகிய இதுவல்லவா? நினது திருவுருவாகிய இதுவே (எனது கட்புலன விட்டு அகலாது) இங்கே இன்னும் கழன்று ஒளி வீசிக் கொண்டிருக்கின்றது. எ-று. இதுவன்றே யென வரும் மூன்றும் சொற்பொருட் பின்வரு நிலேயென்னும் அணிய மைய நி ன் ற ன.