பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை இறைவனருள் பெற்று அவனே தானேயாகிய அந்நெறியில் சித்தம் சிவமாகப் பெற்ற திருமூலர், காரைக்காலம்மையார் முதலிய அருளாசிரியர்கள் திரு வாய் மலர்ந்த அருள் நூல்கள் பன்னிரு திருமுறைகளாகும். பன்னிரு திருமுறைகளும் ஓங்காரத்தின் உட்பொருளாகும். மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாக வழிபாடு செய்த எங்கள் தந்தையாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு மணிவிழா மலராகப் பதினோராம் திருமுறை யில் காரைக்காலம்மையார் அருளிச்செய்த அற்புதத் திருவந்தாதி என்ற நூல் அண்ணாமலைப் பல்கலேக் கழகத் தமிழ்த்துணைப் பேராசிரியர் வித்வான் திரு முறை ஆராய்ச்சிக் கலைஞர் உயர் திரு, க. வெள்ளைவாரணணார் அவர்கள் எழுதிய உரையுடன் வெளி வருகின்றது. இவ்வுரை எழுதி யுதவிய பேராசிரியர், வித்வான் திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர், உயர் திரு க. வெள்ளைவாரணணார் அவர்கட்கும் எனது தந்தையாரின் வாழ்க்கை ஒவியமும், உரை நூல் மதிப்புரையும் எழுதி உதவிய சீர்காழி உயர்திரு. வித்வான் த. சுந்தரேசாரியார் அவர்களுக்கும் எங்கள் நன்றி கலந்த வணக்கம் உரியதாகும். எங்கள் முன்னோர் பரம்பரை