பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பிள்ளைப் பிறையாகிய ஒரு.கதிர் என்க. ஒருகதிர்ஒரு கலே, முதற்கண்ணுன் (எல்லாவுலகிற்கும் காரண மாய்) முன்னே உள்ள வன். முளைத்தானே யெல்லார்க் கும் முன்னே தோன்றி” என்பர் திருநாவுக்கரசர். நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக நீல மணிமிடற்ருன் நீர்மையே-மேலுலந்த தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத் தவ்வருவே யாம். (33) இ-ஸ்: நுண்ணறிவு வாய்க்கப்பெரு தார் வெறும் நூற்புலமையினேயே கருவியாகக்கொண்டு தமக்குத் தோன்றியவாறே பேசித்திரிவாராக, நீலமணி போலும் நிறமும் ஒளியும் வாய்ந்த கண்டத்தினேயுடைய சிவபெருமானது பெருமை:ே தனக்கு மேலாவதெதுவு மின்றி உயர்ந்ததாகும். (அஃது எவ்வாறெனின்) யார் யார் எந்தக் கோலத்தில் எவ்வகைத் திருவுருவங்களே நினேந்து எத்தகைய தவச்செயல்களே மேற்கொண்டு வழிபடுவாராயினும் அவரவர் கருதிய திருவுருவில் வெளிப்பட்டருள்வோன் அவன் ஒருவனேயாதலின். 6T-g. நுழைவு-நுட்பம்; நுண்ணறிவு. நுழைவு இலாதார் நூலறிவு பேசித் திரிக எனவே, மெய்ப் பொருளே யுணர்ந்து மகிழ்தற்குச் சிறிதும் பயன்படாத அன்னேர் கூறும் வெற்றுரைகள் பொருளாக மதிக்கத்தக்கன அல்ல என அறிவுறுத்தவாறு. நீர்மை-புகழ்த் திற மாகிய பெருமை. மேல் உலந்தது-தனக்கு மேலாவது ஒன்றுளதாம் நிலேமை கெட்டது; உயர்வறவுயர்ந்தது என்பது பொருள். அன்பால் நினேந்து வழிபடும் அடி யார்களுக்கு அவரவர் நினேந்த திருமேனிகொண்டு