பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட கணபதி துணை திருத் தணிகேசர் துணை அருணகிரிநாதர் வ ர லா று ம் நூ லா ராய் ச் சி யு ம் " உனதடி யவர் புகழ் ஆய்ந்த நூலினர் உயர்ககி பெற அரு ளோங்கு மாமயி லுறைவோனே. திருப். 878 † : o | CY I LY A] 1. வரலாற்றுப் பகுதி முன்னுரை திருக்கைவேல் அழகிய பெருமானையே தெய்வமாகக் கொண்டு வழிபட்டுப் பேறுபெற்ற தவராஜ யோகி "ழரீ அருணகிரிநாதர்', தமிழிற் சந்தப் பாக்களுக்கு இவரே அதிகர்த்தா. இவர் திருவண்ணுமலையில் இருந்தவர் என் பதும், கி. பி. 1450 ஆம் ஆண்டில் இருந்த பிரபுடதேவ மாராஜர் காலத்தவர் என்பதும் தவிர, இவரது குலம், இவரது தாய் தந்தையர் இன்னுர், இவரது இளமைப் பரு. வத்து நிகழ்ச்சிகள் இவை எனத் தெளிவுறச் சொல்லக் கூடிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை. ஆதலால் இவ. ரது சரித்திர விஷயங்களை எடுத்துச் சொல்லுதற்குத் தக்க ஆதாரங்களாய் இப்பொழுது உள்ளன. இவர் அருளிய திருப்புகழாதிய நூல்களகத்துள்ள சான்றுகளும், இவருக்குப் பின் வந்த பெரியார்கள் இவரைப்பற்றிக் கூறியுள்ள விஷயங் களுமே ஆம். இவைகளைக் கொண்டும், முருகன் திருவருட்