பக்கம்:அவள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாக்ஷாயணி 163


கவனித்துக் கொண்டிருந்தான். வழியெல்லாம் தண்டவாளத்தை விழுங்கி உமிழ்ந்து ஸ்டேஷனுக்குள் விரைந்து துழைந்து நின்று அடங்கிப் பெருமூச்சு விட்டது.

இந்த ஸ்டேஷனில் ஏறுவாரும் இல்லை, இறங்குவாரும் இல்லை. ஆனால் கிலுப்தமாய் வண்டி பிரதி தினமும் இங்கு இரண்டு நிமிஷம் இளைப்பாறிவிட்டுத்தான் சென்றது. இதோ மூச்சைப் பிடித்துக்கொண்டு கிளம்பி விட்டது.

வண்டி வளைவில் திரும்பி மரங்களின் பின் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பசுபதி திரும்பினான். அவன் முகம் கறுத்திருந்தது. நல்ல நிறமாக இருப்பவர்களுக்கு எப்பொழுதும் ஓர் அசெளகரியம். நெஞ்சில் இருப்பதை முகத்தின் நிறம் காட்டிக் கொடுத்து விடும். பசுபதி பாபுவைவிட நிறம்.

"என்ன, போவோமா?"

"டே, பாபூ, ஒடுடா; உன்னை நான் பின்னால் வந்து பிடிக்கப் போறேன்.”

பையன் கொக்கரித்துக்கொண்டு சிட்டாய்ப் பறந்தான்.

அவன் செவிதுரம் தாண்டியதும் தாக்ஷாயினி, உங்களுக்கு இன்று மனம் சரியில்லையல்லவா?” என்றாள்.

அவன் முகம் லேசான பச்சையாய் மாறிற்று. 'உனக்கு அப்படி ஏன் தோணணும்?"

'எனக்குத் தோணவில்லை. தெரியும். இன்று தபால்காரன் வந்து போனதிலிருந்து நீங்கள் சரியாயில்லை. என்னை என்ன என்றுகூடக் கேட்கவில்லை. என்னோடு அப்புறம் சரியாய்ப் பேசக்கூட இல்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/207&oldid=1496396" இலிருந்து மீள்விக்கப்பட்டது