பக்கம்:அவள்.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயம் 474

கடமைகளைச் செய்துட்டே...உனக்கு இக்கு பிடுங்கல் கிடையாது. ஆனால் உமா ஒரு Tough Assignment, உன் இஷ்டம். நான் கட்டாயப்படுத்தமாட்டேன். Up to you.”

சார் ஒண்ணும் சமஸ்கிருதத்தில் பேசவில்லை , ஆனால் அவர் எச்சரிக்கையை ஏற்கும் நிலையில் நான் இல்லை.

அம்மாவிடம் தெரிவித்ததும் கண்ணிரே விட்டுட்டாள். ரவி, நீ பட்ட சோதனைக்கு, அம்பாள் கண் திறந்துட்டாள்டா... இனி நான் நிம்மதியாக கண் மூடுவேன்.'

In the name of all that is beautiful. நான், உமாவைப் பார்த்திருக்கிறேன், ஆனால் ஏதோ லைன்னிதானம் என்கிற முறையில். ஆனால் எனக்குக் கிடைக்க இவ்வளவு அருகே இருக்கிறாள் என்று கனவில்கூட நினைத்திருப்பேனா? What a jolt!

சாம்பசிவனும் அவர்களுடன் வந்திருந்தான். அவன் தான் S.K.C. பண்ணினான். "என்ன மாப்பிள்ளே!' என்றே அவர்களுக்கெதிரேயே அழைத்துவிட்டான். அவனுக்கு அங்கே அவ்வளவு சுதந்தரம் உண்டு.

சாம்பசிவன் இந்த சமயத்துக்கு விஸ்தாரமாவே நினைப்புக்கு வருகிறான். ஏன்? புரியவில்லை.

'சாம்பசிவன் திறமையெல்லாம் பத்து வருஷத்துக்கு முன்னாடியே போச்சு. இப்போ அவன் சமையலா செய்யறான்? என்னத்தையோ பொங்கிப் போடறான். தாங்களும் தின்று வைக்கிறோம் பழைய வாஸனைகளை ஞாபகப்படுத்திண்டு!”

ஸார் என்ன வேனுமானாலும் சொல்லிக்கட்டும். நான் அங்கு போக நேரிடும்போதெல்லாம், அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/515&oldid=1497640" இலிருந்து மீள்விக்கப்பட்டது