பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 அருணகிரிநாதர் களும் பஞ்சாகூடிர ஜெபம் செய்யலாம் என்பதும் அங்ங் னம் செய்தல் விசேடம் என்பதும் புலப்படுகின்றன. (ii) பூநீ சம்பந்தமூர்த்தி ஆண்பனையைப் பெண்பனை யாக்கிய லீலையும் கூறப்பட்டுளது. செய்யுள் 78. (திரிபுரத்) : தேவிக்கு உரிய நாள் * பூரம் என்பது இச்செய்யுளால் தெரிகின்றது. செய்யுள் 80. (சீராம) ; சீரா என்பது உடைவாள்; (பக்கம் 27 பார்க்க). அச்சிட்ட உரையில் சீர்ா-கவசத்தை, தொட்ட-புனைந்த என்பது சரியல்ல. சீரா=உடைவ்ாள்ை; தொட்ட-பிரயோகித்த-என இருத்தல் வேண்டும். எங் சூள் திருப்புகழ்ப் பதிப்பில் மூன்றம் பாகம்-கந்தரலங்காரம் 27-ஆம் செய்யுட் குறிப்புரையைக் காண்க. செய்யுள் 84, (சிவசிவ) : இறைவன் திருவருட் பிரகா சம் சேரச் சேரப் பொறுமை கூடிவரும் ; கோபம் அழிந்து போகும் என்பது இச்செய்யுளாற் பெறப்படும். செய்யுள் 91. (திகிரி) : அகப்பொருளில் :பகற்குறி'இடங்குறித்தல் என்னும் துறை இச்செய்யுள். நீ சம்பந்தர் தேவாரத்தில் குன்றியூர் குடமூக்கு என்னும் திருவலஞ்சுழிப் பாடற் கருத்தோ டொத்தது. 'திகிரி வலம்புரி சூடியவா நன்று சேடியின்றே-திகிரி=சக்கரம், மூங்கில் ; வலம்புரி= (வலம்புரிச்) சங்கு, நந்தியா வட்டப்பூ , மூங்கிலில் நந்தியா வட்டப்பூ அடையாளம் வைத்த (பகற்குறி) நன்று. சக்கரம் சங்கைச் சூடியது நன்று (வேடிக்கை) என்றபடி. சிராமலைக் கோவையில் சீரார் தருபுலி மேல்யானை வாழ்ந்திடச் செய்த னரே” என்றதுபோல ; புலி-வேங்கைமரம், மிருகம்; யானை-ஆம்பல் பூ, மிருகம்; வேங்கை மரத்தின் மீது ஆம் பற்பூ-அடையாளக் குறி-புலிமேல் யானை வாழ்தல்வேடிக்கைப் பொருள். செய்யுள் 92. (சேடி); இது புதல்வன்மேல் வைத்து அனந்த வழியூடல்' என்னும் துறை. வடசேடி, தென் சேடி என்பன வித்யாதரர்களுடைய மலையாகிய வெள்ளியம் பெருமலையிலுள்ள பெரும் பிரிவுகளின் பெயர் (தக்க