பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 11.

1 . .ன் அருணகிரியாரும் முத்தைத்தரு’1 என்னும் . .ப்பாவை முடித்துப் பேருவகை கொண்டார். 5. பெற்ற பேற்றினை நினைத்து மகிழ்தலும் பிற பேறுகளும் நல்லுபதேசமும் அருள்வாக்கும் பெற்ற அருணகிரி' நாதம் பெறற்கரிய பேற்றைத் தாம் பெற்றதை நினைத்து நினைத்து மகிழ்ந்தார். கண்பெற்ற குருடன் போலவும்: காற்றிற் கலங்கிய கலத்தினர் கரைகண்டது போலவும்: பேரானந்தங் கொண்டார் : பாடினர், ஆடினர், பரவினுர், பணிந்தார். பிணியெலாம் நீங்கினவராய், முத்தமிழாதிய கலேவல்லவராய், யோகீசுரராய், மெய்ஞ்ஞானியராய், அகில சத்தியும் எட்டுறு சித்தியும் வாய்ந்தவராய்ப் பத்திக்கடலில் திளைத்துப் பரவசம் உற்றனர். தமக்குக் குருவாய்வந்த கோபுரத் திளையனுர் சந்நிதியிலேயே தவநிலையிலிருந்து வந்தனர். சந்தப்பாக்களையும் நிவிடிடை கலைந்த வேளை களிற் பாடி வந்தனர். அங்ங்ணம் தவநிலையிலிருந்த பொழுது அருணுசலேசுரரும் இவர் தவ நிலைக்கு உகந்து: இவர் முன் தோன்றித் திருநீறு அளித்து 'நின்துயர் | இப்பதிகத்துக்கு 'முத்தித்தரு பத்தித்திருநகை, அத் திக்கிறை சத்திச் சரவண, முத்திக்கொரு வித்துக்குரு பர-என ஒதும்-முக்கட் பரமற்குச் சுருதியின் முற்பட் டது கற்பித்திடு பொருள் !’ என்றும் பாடபேதம் உண்டு. இங்கே பொருள் என்பது விளி. பரமற்குக் கற்பித்திடு பொருளே ! பச்சைப்புயல் மெச்சத்தகு பொருளே ! நீ ரகூஜித்தருள்வதும் ஒருநாளேஎனப் பொருள் கொள்ள வேண்டும். இப்பதிகக் கருத்தை முத்து.நவ ரத்ன என்னும் 971-ஆம் பதி கத்திலும் காண்க. 'முத்தித்தரு பத்தித் திருநகை ஆத்தி' எனவும் பாடம். பத்திதரு முத்திநகை யத்தி யிறைவா-எனும் விரிஞ்ச்ைப் பிள்ள்ைத்தமிழும், முத் தித் திருவென்னும் முன் பதிருையிரமாம் பத்தித் திருப் புகழைப் பாடுங்காண்-எனவரும் தணிகை யுலாவும் ஈண்டு கவனிக்கற்பாலன. தேவசேனை முத்திதரு மாது என்பதற்கு 'அமுதத் தெய்வானை திரு முத்தி மாது, ஆரியகேவலி' எனவரும் திருப்புகழ் (764), 1918 ைகாாமாாம். -