பக்கம்:அவள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோடு 105


"அம்மா வாங்கிக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கா, கோவிச்சுப்பா.”

பெரியவர் புன்முறுவல் பூத்தார்.

"தாே, அம்மா வந்துாட்டாளே!"-அபிதா ஒடிப் போய் அம்மா காலைக் கட்டிக்கொண்டாள்.

நடுக்கோடை. அஸ்தமன நேரம், ஆனால் அஸ்தமனம் இன்னும் நேரவில்லை. ராஜராஜேஸ்வரி கோயிலில் சாயங்கால தீபாராதனை ஆலயமணி தீர்க்கமாக ஒலிக்கத் தொடங்கிற்று. கிரிஜாவின் கைகள் கூப்பின. பிறகும் அவளுக்குத் தெரியவில்லை. அவள் வணங்கியது மணியோசையையா, அவரையா? ஏனெனில், இரண்டுமே அவளுக்குப் பழக்கமில்லை.

"அம்மா, தான் தாத்தாவிடம் சாக்கலேட் வாங்கிட்டுமா?"

"முரளிக்கும் வேணும்’-முரளி, தன்னைச் சுட்டிக் காட்டிக்கொண்டான்.

அபிதா கையை ஓங்கினாள். "போடா, நோக்குக் கிடையாது. நீதான் உன் பங்கைத் தின்னாச்சே!"

"முரளிக்கு நுன்னுன் நொன்னுாணு வேனும்!"

"என்ன சர்ச்சை?" எல்லோரும் திரும்பினர், பெரியவரைத் தவிர.

"அப்பா அப்பா!"-அபிதா, அப்பாமேல் தாவினாள். நேக்கு ஜாங்லி வாங்கிண்டு வந்திக்கையா?”

அந்தி மங்கல் வந்துவிட்டது. எப்படி இப்படிச் சட்டென வந்தது? கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இருவரும் பெரியவரைப் பார்த்தனர். அந்த கூணமே ஆலயமணி, கண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/149&oldid=1497042" இலிருந்து மீள்விக்கப்பட்டது